திரட்சியான சொல்லாட்சி!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

நடுப்பக்கத்தில் மத்தியப் பிரதேசத்தை காட்டு காட்டென்று காட்டி காவ்யா சிங் கொடுத்திருக்கிற போஸும், அதற்கு ‘மாறுது காட்சி, இனிமே நம்ம ஆட்சி’ என்கிற கமெண்டும் எலெக்‌ஷன் ரிசல்ட் வந்ததற்கு மறுதினம் வெளிவந்த இதழுக்கு ரொம்பவே பொருத்தமாக இருந்தது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘மின்னுவதெல்லாம் பொன்தான்’ பகுதியில் தமிழ் சினிமா மறந்துவிட்ட பிரும்மாண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனை மீண்டும் நினைவுறுத்தியது அருமை.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

41-ஆம் பக்கத்து தஷு கெளசிக் ஸ்டில் சூப்பரு. புள்ளி தெரிஞ்சாலே, அதை வெச்சு மைதானம் கட்டி, கில்லி விளையாடுவதில் கில்லாடியான ‘வண்ணத்திரை’ வாசகர்களான எங்களுக்கு புல்வெளியையே காட்டிட்டீங்க. சும்மா பாய்ஞ்சி மேய்ஞ்சிட மாட்டோம்?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

எலிமையே வெல்லும் என்கிற தலைப்பில் ‘மான்ஸ்டர்’ படத்துக்கு எழுதப்பட்ட விமர்சனம் சூப்பர். படத்தின் சிறப்புகளை சுட்டிக்காட்டி, படம் பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள். விமர்சனம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘வண்ணத்திரை’யில் வெளியிடப்படும் புளோஅப் படங்களுக்கு நீங்கள் எழுதும் கமெண்டுகளை ‘திரட்சியான சொல்லாட்சி’ என்று பாராட்டலாம். அதை எழுதும் சொல்கலை வேந்தர் யாரோ?
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

நடுப்பக்க காவ்யாசிங்கின் கலசக்காட்சி ஆட்சியையே கவிழ்த்தாலும் ஆச்சரியம் ஏதுமில்லை.
- சுவாமி சுப்பிரமணியா, குனியமுத்தூர்.

எந்த கோட்டையும் ஒருநாள் சரியும் என்பதற்கு ஏற்ப கே.டி.குஞ்சுமோனின் வீழ்ச்சியை பைம்பொழில் மீரான் எழுதியிருந்தது யதார்த்தமாக இருந்தது.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.