சமந்தாவுக்கு 3 கோடி சம்பளம்?



திருமணத்துக்குப் பிறகும் சமந்தாவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சமந்தா நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான படம் ‘ஓ பேபி’. ரிலீஸான முதல் வாரத்திலேயே இந்தப் படம் பதினேழு கோடியை அள்ளியதாம். இந்த கலெக்‌ஷன், இதுவரை நாயகியை மையப்படுத்தி வெளிவந்த படங்களிலேயே அதிகமாம்.

 இந்த வெற்றியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சமந்தா இப்போது மூன்று கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். தயாரிப்பாளர்களும் சமந்தா கேட்கும் தொகையைத் தருவதற்கு தாராளமாக இருக்கிறார்களாம்.

‘மிஸ் கிரானி’  என்ற கொரியன் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தை ராணாவின் குடும்ப நிறுவனமான சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. விரைவில் இந்தியிலும் ரீ-மேக் பண்ணும் உத்தேசத்தில் உள்ளதாம் தயாரிப்பு  நிறுவனம்.

- திருப்பதி பாவா