பெருங்கடல்!



சரோஜாதேவி பதில்கள்

* ஆண், பெண்; இருவரின் பலகீனம் என்ன?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
ஆணுக்கு ஆசையும், பெண்ணுக்கு இரக்கமும் பலகீனம்.

* பிட்டுப் படங்கள் அவ்வளவாக வருவதில்லையே?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
இளசுகளுக்கு பார்க்க பிடிக்கலையாம். நேரடியாக ‘பழகி’ விடுகிறார்கள்.

* ஆணிடம் பெண்ணுக்கும், பெண்ணிடம் ஆணுக்கும்
எப்போது கிறக்கம் குறைகிறது?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
ஆணுக்கு தொப்பை விழும்போது பெண்ணுக்கும், பெண்ணுக்கு குழந்தை பிறந்தபிறகு ஆணுக்கும்.

* இந்தக்கால பெண்கள் தலையில் பூ வைப்பதை தவிர்க்கிறார்களே?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
மற்றவர்களுக்கு காதுலே பூ வைக்கிறார்களே, போதாதா?

* நீந்த முடியாத பெருங்கடல் எது?
- என்.இன்பா, திருவண்ணாமலை.
காமம். எல்லோரும் கரையில்தான் கால் நனைக்கிறோம்.