பெருங்கடல்!
சரோஜாதேவி பதில்கள்
* ஆண், பெண்; இருவரின் பலகீனம் என்ன? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. ஆணுக்கு ஆசையும், பெண்ணுக்கு இரக்கமும் பலகீனம்.
* பிட்டுப் படங்கள் அவ்வளவாக வருவதில்லையே? - த.சத்தியநாராயணன், அயன்புரம். இளசுகளுக்கு பார்க்க பிடிக்கலையாம். நேரடியாக ‘பழகி’ விடுகிறார்கள்.
* ஆணிடம் பெண்ணுக்கும், பெண்ணிடம் ஆணுக்கும் எப்போது கிறக்கம் குறைகிறது? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. ஆணுக்கு தொப்பை விழும்போது பெண்ணுக்கும், பெண்ணுக்கு குழந்தை பிறந்தபிறகு ஆணுக்கும்.
* இந்தக்கால பெண்கள் தலையில் பூ வைப்பதை தவிர்க்கிறார்களே? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்) மற்றவர்களுக்கு காதுலே பூ வைக்கிறார்களே, போதாதா?
* நீந்த முடியாத பெருங்கடல் எது? - என்.இன்பா, திருவண்ணாமலை. காமம். எல்லோரும் கரையில்தான் கால் நனைக்கிறோம்.
|