கனவுகள் கரையேறுமா?



‘‘உதவி இயக்குநராக முறைப்படி சினிமாவைக் கற்றுக்கொண்டுதான் டைரக்‌ஷன் நாற்காலியில் உட்கார்ந்தேன்’’ என்கிறார் இயக்குநர் கே.பி.எஸ்.சாமி. இவர் தயாரித்து இயக்கும் படம் ‘கரையேறும் கனவுகள்’.நாயகனாக ராஜேஷ் பாலகிருஷ்ணன் நடிக்கிறார். நாயகிகளாக சாண்ட்ரா பாபு, கஸ்தூரி, ரம்யா நடிக்கிறார்கள். டாக்டர் ஜனா, வெற்றிமுருகன், தனா, இயக்குநர் கே.பி.எஸ்.சாமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

ப்ரவீன்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சத்தியமூர்த்தி, சாந்தன் இணைந்து இசையமைக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் சேலம், ஏற்காடு, கருமந்துறை,  மன்னார்பாளையம் மலையடிவாரம் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன. ‘‘இந்த உலகத்தில் அனாதை என்று யாருமில்லை. சொந்தக் குடும்பத்தினர் கைவிடும்போது தான் அனாதைகள் உருவாகிறார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லியுள்ளேன்.

படத்தில் புதுமுகங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் எல்லோரும் தங்கள் திறமையால் பேசப்படுவார்கள். இது எல்லோருடைய வாழ்வையும் தொட்டுச் செல்லும் கதை என்பதால் எல்லோரும் கதையை உள்வாங்கி நடித்தார்கள். அந்தவகையில் உறவுகளின் மேன்மையை மண்வாசனையுடன் சொல்லியுள்ளேன்’’ என்கிறார் இயக்குநர் கே.பி.எஸ்.சாமி.

- ரா