மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.டி.பார்க்!



ஐதராபாத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஐ.டி பார்க் ஷாம்ஸாபாத் ஏர்போர்ட் அருகில் பத்து ஏக்கரில் விரைவில் அமைக்கப்படவிருக்கிறது. அரசு - தனியார் கூட்டில் தெலுங்கானா அரசு உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் இத்திட்டத்தை அறிவித்துள்ளது.

‘‘மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி மற்றும் தங்கும் வசதிகளோடு, அடுத்த 5 ஆண்டுகளில் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு என்பது அரசின் திட்டம்...’’ என விவரிக்கிறார் ஐ.டி துறை செயலர் ஜெயேஷ் ரஞ்சன். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சுயதொழில் கடன், கல்வி உதவித்தொகை, பாடநூல்கள், லேப்டாப்கள், ட்ரை சைக்கிள்கள் ஆகியவை அரசினால் வழங்கப்படவிருக்கின்றன. இதில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 500 மாற்றுத்திறனாளிகளுக்கும் கல்வி, தொழிற்
பயற்சி பெற சான்ஸ் உண்டு.   

- ரோனி