கவிதை வனம்



குருங்கவிதைகள்

* குளம் மரணம்
அடுக்குமாடி குடியிருப்புகள்
தண்ணீருக்கு மறியல்.

* மரங்களின் வெறுமை
முகத்தில் அறைகிறது
வெய்யில்.

- ச.குரு பிரசாத்

அரூப தோழமை

படிகளில் இறங்கிக்
கொண்டிருப்பவளின்
தோள்களில்
செல்லமாய் அடித்து
‘ஏய்... எருமை... எங்கே’
என்கிறாள்
ஏறிக்கொண்டிருக்கும்
அம் மத்திம வயதுப்பெண்.
இறங்கியவள் உரத்துச்
சொல்லும் பதில்
நகரும் பேருந்தின்
எதிர்க்காற்றில் மெல்லக்கரைய
குனிந்து கையசைப்பவளின்
பூரித்த முகம்
இயல்பான பின்னும்
ஏறவும் முடியாமல்
இறங்கவும் முடியாமல்
படிகளில்
பயணித்தபடியே வந்தது
அரூப தோழமையொன்று.
- கே.ஸ்டாலின்