ராகி கூழ்



என்னென்ன தேவை?

கேழ்வரகு மாவு - 1 கப்,
மோர் - 1 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம்,
இஞ்சி - தலா 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மோருடன் உப்பு, இஞ்சி சேர்த்து அரைக்கவும். ராகி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து கிண்டி இறக்கவும். ஆறியதும் மோர் கலவையை ஊற்றி வெங்காயம் சேர்த்து குளிரவைத்து பரிமாறவும்.