உக்காரை



தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு - 1 கப்,
பயத்தம் பருப்பு - 1 கப்,
வெல்லம் பொடித்தது - 2 கப்,
ஏலக்காய் - சிறிது,
நெய் - 1/2 கப்,
முந்திரி பருப்பு - அலங்கரிக்க.

செய்முறை

கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாக சுத்தம் செய்து ஊற வைக்கவும். ஊறியதும் வடித்து, வடைக்கு அரைப்பதுபோல் கெட்டியாக கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த பருப்பு விழுதை போட்டு கிளறவும். நன்கு உதிர் உதிராக வந்தவுடன் ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். பின்னர் ஒரு கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு பாகு காய்ச்சவும். பாகு கொதிக்கும்போது அதில் பருப்பு உசிலியைக் கொட்டிக் கிளறவும். இது வதங்கி புட்டுபோல் உதிர் உதிரான பின் ஏலப்பொடி சேர்த்து நெய் சிறிது போட்டு கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி கட்டியின்றி உதிர்க்கவும். வறுத்த முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.