தினை அரிசி காய்கறி உப்புமா



தேவையான பொருட்கள்

1 கப் துவரம் பருப்பு - 1 கைப்பிடி,  மிளகு, சீரகத் தூள் - 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும். காய்கறிக் கலவை - 1 கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி),  தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - 1 இரண்டாக கீறவும்,  கருவேப்பிலை - 1 இனுக்கு, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன்,  உளுந்து - 1/2 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை

தினை அரிசியோடு கரகரப்பாக பொடித்த துவரம் பருப்பையும் மிளகு சீரகத் தூளையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வெங்காயத்தை வதக்கவும். அதில் பச்சை மிளகாய், கருவேப்பிலை, காய்கறிக் கலவையை வதக்கி உப்புப் போட்டு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் கொதிக்கும்போது தினை அரிசி, துவரம்பருப்பு, மிளகு சீரகப் பொடியைச் சேர்த்துக் கிளறி வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.