facebook வலைப்பேச்சு



நாம் சிலரை வெறுப்பதற்குக் காரணம், அவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாதது தான். அவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாததற்குக் காரணம், நாம் அவர்களை வெறுப்பது தான்!
- மஞ்சுபாஷினி ஜெகதானந்தன்

தூங்குவதற்கு முன்னும், தூங்கி எழுந்ததும் அம்மாவைத் தேடும் குழந்தைகள், தூக்கத்திலும் அம்மாவுடன்தான் இருக்கின்றன.
- அராத்து

எல்லாவற்றுக்கும் தீர்வு சொல்லப்பட்டிருக்கும் மத நூல்களில் எபோலா நோய்க்கு ஏதேனும் தீர்வு இருக்கிறதா, மரணத்தைத் தவிர?
- யுவான் சுவாங்

மழை
எப்போதும் நிற்பதில்லை
இடம்தான் மாறுகிறது
இப்போது
நமக்கிடையில்
- பழநிபாரதி

நகர்த்தும் காய்கள்
வெட்டப்படுகின்றன
என்றாலும்
குருதியில் எழுதலாம்
வெற்றியை
- ராஜா சந்திரசேகர்

பிள்ளையார் என்ன செய்கிறார் தெரியவில்லை; ஆனால் பூசாரிகள் அனைவரும் புல்லட் வைத்திருக்கிறார்கள்.
- அதிஷா அதிஷா

பேருந்துப் பயணம்
ஒலிக்கும் பிடித்த பாடல்
இறங்கும் நிறுத்தம்
- கி.சார்லஸ்

தண்ணீரில் மீன்கள் மட்டுமே இருக்கும் என நம்புகிற பறவைக்கு முதலை ஒன்று கற்றுத் தருகிறது வாழ்க்கையின் உண்மையை...
- கோவி லெனின்

மரம் இல்லாத வீடொன்றினை வரைவதில்லை மழலைகள்...
- சண்முக வடிவு

எதிரிகள் என்னை விரட்டுகிறார்கள்
நண்பர்களை நானே விரட்டுகிறேன்..!
- வாசு முருகவேல்

நம் வீட்டில் டிவி, ஏசி ரிமோட் வேலை செய்யலைன்னா அவசரத்துக்கு பேட்டரியைக் கழட்டி உள்ளங்கையில் வைத்து நல்லா தேய்த்து உரசி சூடு ஆனதும் போட்டு பார்த்தா வேலை செய்து... உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா.
# வேற யாரு கண்டுபிடிப்பு? நம் தமிழனாகத்தான் இருக்கும்!
- சக்திவேல்

உங்கள் சிறகுகள் என்னிடம் இல்லை.
என் சிறையும் உங்களிடம் இல்லை...
- இந்திரா கிறுக்கல்கள்

நாய் மனுஷனுக்கு மட்டுமே
நன்றியுள்ளது.  

- உமா மகேஸ்வரன்

twitter வலைப்பேச்சு

@palkarbetko 
  இன்னும் பத்து வருடத்தில் வேற்று கிரக வாசிகளை கண்டுபிடித்து விடுவோம்: நாசா
# முதல்ல மலேசியா விமானத்த கண்டுபிடிங்க!

@swtybhar   
ன்னை ஏமாற்றியவரைக்கூட என்னால் ஏமாற்ற முடியவில்லை; ஏமாற்றத்தின் வலி எனக்குத் தெரியும் என்பதால்!

@flo_chandru   
உங்களை எல்லாருக்கும் பிடிக்குதுன்னா, ஒவ்வொருத்தொருக்கும் ஏத்த மாதிரி நடிக்கிறீங்கன்னு அர்த்தம்...

@tamiljokes   
சரிம்மா... சாரிம்மா...
இந்த ரெண்டு வார்த்தை இருந்தாலே போதும்; குடும்பத்துல ஒரு பிரச்னையும் இல்ல!

@riyazdentist
இன்று உலக இடது கை
உபயோகிப்பாளர் தினம்...
இவர்கள் இதன் மூலம்
இச் சமூகத்துக்கு என்ன
சொல்ல வருகிறார்கள்?

@karuthujay       
மலையில் செஃல்பி எடுக்கும்போது கால் தவறி கடலில் விழுந்து தம்பதி பலி!
# போட்டோ எடுத்தா செத்துடுவாங்கன்னு ‘முண்டாசுப்பட்டி’காரங்க சொன்னது சரிதான்:(

@smileygirlch   
நம்மள துரத்த ஆயிரம் விஷயம் இருக்கு. ஆனா, நாம துரத்துர ஒரே விஷயம் பணம்... கடைசியிலும் அதுவே ஜெயிக்கிறது.

@senthilcp   
ஹை க்ளாஸ்

மக்களுக்கு டைவர்ஸ்ங்கறது வாடகை வீட்டை காலி பண்ற மாதிரி போல... அடிக்கடி நடக்குது!

@iAalumai 
 ரோடு, வீடு எல்லாத்தையும் கான்கிரீட்ல மூடி மழைத்தண்ணி உள்ளவே போக விடாம பாத்துப்பேன். ஆனா போர் போட்டா தண்ணி 20 அடில கெடைக்கணும். என்னா பேராசை?

@amas32 
கோபம் வந்து திட்டும்போது எனக்கே இத்தனை கெட்ட வார்த்தைகள் தெரியுமா என்று பயந்து போய் விடுகிறேன்!

@Tottodaing     
நல்லவன்னு சொன்னா போதாது. எவ்ளோ நல்லவன்னு நிரூபிக்கணும்... கெட்டவனுக்கு அந்த கஷ்டமில்ல!

@NamVoice   
பாவாடை, தாவணி கைத்தறியில் மட்டுமே தயாரிக்க மத்திய அரசு உத்தரவு!
# தயாரிச்சா மட்டும் போதாது, உடுத்தவும் உத்தரவு போடுங்கய்யா