கவிதை வனம்
சந்தேகம்
ஆடி கடைவெள்ளிக்கு கிடா வெட்டி படையலுக்குக் காத்திருக்கும் அய்யனாருக்கு வறண்ட நிலங்களை கண்டு சுருண்டு விழுந்து இறந்த விவசாயிகளின் விபரம் தெரியாமல் போனது எப்படி?
- சங்கீத சரவணன்
அதிசயம்
ராமனும் பெரியாரும் ஒரே மேடையில் தோன்றும் அதிசயத்தை குழந்தைகளே நிகழ்த்துகிறார்கள் மாறுவேடப்போட்டிகளில்
- கு.வைரசந்திரன்
|