ஸ்ரீரெட்டிக்கு பின்னால் இருப்பவர் யார்?



டாக் ஆஃப் த டவுன் நடிகை ஸ்ரீரெட்டிதான். பட வாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்து பல இயக்குநர்களும், நடிகர்களும் தன்னை பாலியல் ரீதியாக சுரண்டியதாக  அவர் அறிவித்திருக்கிறார்.இத்துடன் ‘தினப் பலன்’ சொல்வது போல் நாள்தோறும் ஒரு பிரபலமானவரின் பெயரை உதிர்த்து, ‘இவர்கள்தான் என்னைப் ‘பயன்’படுத்தியவர்கள்...’ என தன் சமூக வலைத்தளப் பக்கங்களில் பட்டியலிட்டு வருகிறார்.இப்போது தமிழகத்தை மையம் கொண்டிருக்கும் இந்த ஸ்ரீரெட்டி புயல், சில மாதங்களுக்கு முன்பு வரை தெலுங்குத் திரையுலகைச் சுழற்றி அடித்த சுனாமிதான்.
துணை நடிகை, இரண்டாம் நிலை நடிகை என்றெல்லாம் சுட்டப்படும் ஸ்ரீரெட்டி, தனது Sri Reddy, Sri leaks வலைப்பக்கத்தில் தன்னை பாலியல் ரீதியாக சுரண்டியவர்கள் என பல முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர்களையும், அவர்களது மகன்களையும், பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களையும் பெயர் சொல்லியும், குறிப்பால் உணர்த்தியும் குற்றம்சாட்டினார்.இவற்றுக்கு எல்லாம் சிகரம் ஐதராபாத்திலுள்ள திரைப்பட வர்த்தக சபை முன் இவர் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியதுதான்.ஒருவழியாக தெலுங்கு சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி விட்டு இப்போது தமிழ்த் திரையுலகம் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்.

இந்நிலையில்தான் முக்கியமான கேள்வி ஒன்று எழுகிறது.  எவ்வித பின்னணியும் இல்லாதவர் ஸ்ரீரெட்டி. அப்படிப்பட்டவர் பிரபலமானவர்களை எதிர்க்கிறார். அவர்கள் மீது பாலியல் குற்றம் சுமத்துகிறார். எனில், பின்னணியில் இருந்து யாரோ ஒருவர் அல்லது பலர் இவரை இயக்க வேண்டும். யார் அவர் / அவர்கள்?இந்தக் கேள்வியை ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில், தெலுங்குத் திரையுலகம் குறித்து ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டியபோது இவரைப் பின்னணியில் இருந்து முடுக்கி  விட்டவர் டைரக்டர் ராம்கோபால் வர்மா என்ற பேச்சு எழுந்தது. இதற்கான ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டன. அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட பிரபலம் யாராவது இப்போது ஸ்ரீரெட்டியை இயக்குகிறார்களா? தங்கள் எதிரிகளை வீழ்த்த இவரை பகடைக் காயாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களா?கோடம்பாக்கம் விடை தேடிக் கொண்டிருக்கிறது.             

- காம்ஸ் பாப்பா