பார்சல் சைக்காலஜி!



‘‘சாப்பிட என்ன வேணும்..?’’
‘‘சாப்பிடலப்பா... பார்சல் வேணும்...’’
‘‘என்ன பார்சல்..?’’
‘‘நாலு செட் பரோட்டா... இல்ல... இல்ல... மூணு செட் பரோட்டா. மூன்றையும் தனித் தனியா கட்டு... ஆனா, சால்னாவ ஒண்ணாவே கட்டிடு...’’
‘‘சாருக்கு ஒரு பையன் ஒரு பொண்ணா..?’’
‘‘ஆமாம்பா...’’

‘‘பையன் நீ சொன்ன பேச்ச கேக்க மாட்டான். சரியா..?’’
‘‘அட ஆமாம்பா... எப்படி கண்டுபிடிச்ச..!?’’
‘‘நாலு செட் சொல்லி ஒன்ன கான்செல் பண்ணும் போதே கண்டு பிடிச்சிட்டேன்...’’
‘‘அடடா...’’

‘‘அப்புறம் வீட்ல பாத்திரம் கழுவுறது நீதான்... கரெக்ட்டா..?’’
‘‘பின்றியேப்பா... எப்படி..?’’
‘‘பரோட்டா தனித் தனியா கட்டும்போதே தெரியுதே...’’
‘‘நீ வாழும் ஞானிப்பா...’’

‘‘தேங்க்ஸ். அப்புறம் உம் பொண்ணு வீட்ல இருந்த இடத்த விட்டு நகராது... இந்தப் பக்கம் இருக்கிறத தூக்கி அந்தப் பக்கம் வைக்கவே கூலி கேக்கும். சரியா..?’’
‘‘சரியா சொல்றியேப்பா... எப்படி?’’‘‘அது ஒழுங்கா குனிஞ்சி நிமிந்து வேல செஞ்சா நீ ஏன் பார்சல தனித் தனியா வாங்கப் போற..?’’
‘‘அடப் போப்பா...’’
‘‘அப்புறம் உனக்கு கண்ணுல பிரச்னை...’’
‘‘அட ஆமா... எப்படி..?’’

‘‘கண்ணு நல்லாருந்தா சால்னாவையும் தனித் தனியா கட்ட சொல்லிருப்ப. மூணு பொட்டலத்த பிரிக்க முடியாதுன்னுதான் ஒன்னா வாங்கிட்டுப் போற...’’
‘‘நீ வேற லெவல் ப்பா..!’’
‘‘அப்புறம் உம் பொண்டாட்டி...’’
‘‘யப்பா வேணாம்ப் பா...’’
‘‘ஏன்..?’’‘‘உன்னய பரோட்டாவத்தான் பார்சல் கட்ட சொன்னேன்... என் குடும்ப மானத்த இல்ல..!’’ஸ்ரீ

நெட்டிசன்