உன்ன பார்த்தா பொறாமையா இருக்கு வனஜா!



-உன்னயப் பாக்கும்போதெல்லாம் எனக்குப் பொறாமையா இருக்கு வனஜா..!
- நெஜமாவா..?
- மதர் ப்ராமிஸ்..!
- பொய் சொல்லாதீங்க...
- அட... நிஜமாதாம்மா...

- அப்படினா எதுக்காக பொறாமைப் பட்டீங்க..? அழகா இருக்கேனே... 
அதுக்காகவா?
- இல்ல... 
- அதிகம் படிக்கலைன்னாலும் அறிவா பேசுறேனே... அதுக்காகவா?
- இல்ல... 

- நல்லா சமைக்கிறேனே... அதுக்காகவா?
- இல்ல... 
- உங்க அம்மா அப்பாட்ட தன்மையா நடந்துக்குறேனே... அதுக்காகவா?
- இல்ல... 

என் கையெழுத்து அழகா இருக்கே... அதுக்கா?
- இல்லவே இல்ல...
- அப்புறம் வேற எதுக்கு என்னப் பாத்து பொறாமைப் பட்டீங்க..?
- உனக்குதான் எத்தனை அழகான, அறிவான புருஷன் கிடைச்சிருக்கான்... அத நெனச்சித்தான் பொறாமைப் 
பட்டேன்...

- என்னது... எடுடா அந்தக் கரண்டிய..!

தொகுப்பு: பொம்மையா முருகன்