தத்துவம் மச்சி தத்துவம்



‘‘தலைவர் ஏன் தேர்தல் கமிஷன் மேல கடுப்பா இருக்கார்..?’’
‘‘எல்லாருக்கும் விரல்ல மை வைக்கிற செலவையும் இவர் கணக்குல சேர்த்துட்டாங்களாம்...’’
- சி.கார்த்திகேயன், சாத்தூர்.

‘‘அடுத்ததாக நமது தலைவர் பேச உள்ளார்... அவர் பேச்சைக் கேட்க விரும்பாதவர்கள், என்னுடன் மைதானத்தை விட்டு வெளியே வந்து விடலாம் எனக் கேட்டுக் கொண்டு அவரைப் பேச அழைக்கிறேன்!’’- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘அந்த டாக்டர் அரசியல்வாதியாவும் இருக்கார்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘தன்னோட பேஷன்ட்டுகள் சாகும் வரை போராடுவேன்னு சொல்றாரே!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்
குங்கய்யா!’’
‘‘எதுக்கு தலைவரே..?’’
‘‘சிபி.ஐ கேட்ட எல்லா கேள்விகளுக்கும் நான்
கரெக்டா பதில்
சொல்லிட்டேனே!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

‘‘தேர்தல் முடிஞ்சதும் தலைவர் ரெண்டு கையும் பயங்கரமா குடையுதுங்கறாரே... ஏன்?’’
‘‘பிரசாரம் செய்தபோது பொய்யான வாக்குறுதிகளை எக்கச்சக்கமா வாரி விட்டதுல வந்த வலியாம்..!’’
- ம.விருதுராஜா, திருக்கோவிலூர்.

‘‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
‘‘அவர் அதிகம் காண்பது பிரதமர் கனவா, முதல்வர் கனவான்னு தொண்டர்கள் பட்டிமன்றம் நடத்தறாங்களாம்..!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

என்னதான் கடிகாரம் நேரம் காட்டும்னாலும் அது நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம்னு பிரிச்சு எல்லாம் காட்டாது!
- நேரம், காலம் பார்க்காமல் வேலை செய்வோர் சங்கம்.
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.