உள்ள(த்)தைச் சொல்கிறோம்



சமயத்தில் செய்த சரியான உதவி

ராகு - கேது தலங்கள் கட்டுரையில் பரிகாரத்தலங்களை பட்டியலிட்டுக் காட்டியது, ஆன்மிக வாசகர்களை ஒவ்வொரு தலத்திற்கும் தரிசிக்க அழைத்துச் சென்ற உணர்வை ஏற்படுத்தியது.
 - இராம.கண்ணன்,  திருநெல்வேலி.

ஞானியருக்கும் யோகியருக்கும், மிகப்பெரிய விஞ்ஞானியருக்கும் மூளையின் ஸஹஸ்ராரத்தில்  ஓஜஸ் எனும் தெளிந்த நீர் போன்ற திரவம் சுரக்கும். மத  ஞானத்தை அருளும் அந்த திரவத்தில் ஆசூரி துர்க்கை ஆழ்ந்த பிரேமையெனும் உணர்வாக கலந்தருளுகிறாள். ஆசைகளை அறவே அகற்றி ஆனந்தத்தை அளிக்கும் ஆசூரி துர்க்கையே பீஷ்மருக்கு ஞானம் அளித்தவள். ‘விஷ்ணு ஸஹஸ்ரநாமம்’ தோன்ற காரணமே ‘ஆசூரி துர்க்கை’தான் என்பது அரிய செய்தி.
- அரிமளம் தளவாய் இரா.நாராயணசாமி, பெங்களூர்.

‘புத்தகம் புதுசு’ பகுதி, அதில் இடம் பெறும் அத்தனை புத்தகங்களும் வாசித்துப் பயன்பெற வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.
- எஸ்.வளர்மதி, கொட்டாரம்,
கன்னியாகுமரி.

மேல் படிப்பு பற்றிய சிறு குழப்பத்தில் நான் ஆழ்ந்திருந்தேன். சென்ற இதழில் தாங்கள் அளித்திருந்த ஹயக்ரீவ கவச ஸ்தோத்திரம் படித்த பிறகு என் குழப்பங்களைத் தெளிவாகி, தீர்மானமான, எதிர்கால நன்மை அளிக்கக்கூடிய படிப்பை நான் மேற்கொள்ளப் போகிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். சமயத்தில் தாங்கள் செய்த சரியான உதவி இது.
- வை.ரங்கநாதன், கள்ளிக்காடு.

ராகு - கேது பரிகாரத்தலங்கள் பற்றிய தகவல்களும், ராகு - கேது பெயர்ச்சி பொதுப் பலன்களும் மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தன.
வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி - 18.