2018ம் ஆண்டின் முதல் வாரிசு!



பெங்களூருவிலுள்ள மருத்துவமனையில் ஜனவரி முதல் தேதி பிறந்த குழந்தைக்கு கல்விச்செலவு முழுவதையும், தானே ஏற்பதாக உறுதிமொழி கூறியுள்ளது மருத்துவமனை நிர்வாகம். ராஜாஜி நகரின் மருத்துவமனையில்தான் மேற்படி சம்பவம் நிகழ்ந்தது. புத்தாண்டு பிறந்த 5 நிமிடத்தில் பிறந்த குழந்தை என்பதால் இந்த ஸ்பெஷல் பரிசு.

‘‘கோபி - புஷ்பா என்ற தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு ரூ.5 லட்சம் வங்கிக்கணக்கில் விரைவில் பணம் டெபாசிட் செய்யப்படவிருக்கிறது...’’ என்கிறார் மருத்துவமனை அதிகாரியான எல்.சுரேஷ். ‘‘புத்தாண்டு அன்று அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு கல்லூரி வரையிலான செலவுகளை அரசே ஏற்கும் என்பது இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தொன்மை வழக்கம்...’’ என்கிறார் நகர மேயரான சம்பத் ராஜ்.   

- ரோனி