கே.வி.ஆனந்த் ப்ளே ஸ்டோர்



பொக்கிஷமாக பாதுகாப்பது: பத்திரிகை புகைப்படக்காரராக இருக்கும்போது எடுத்த போட்டோக்கள் + ‘கல்கி’யில் முதன்முதலில் வெளியான அட்டைப்படம் + கொள்ளுத்தாத்தா, பாட்டி விட்டுச்சென்ற கலைநயமிக்க பொருட்கள்.

ரசனை: ருசியான உணவுஎங்கிருந்தாலும் தேடிப் போய் உண்பார்.

கையிலிருப்பது: ஐபோன் 10.

தமிழில் பிடித்த படங்களில் டாப்-5: ‘உதிரிப்பூக்கள்’,
‘தில்லானா மோகனாம்பாள்’, ‘மவுனராகம்’, ‘அருவி,’
‘அவள் அப்படித்தான்’.

சமீபத்திய சாதனையாக நினைப்பது: சினிமாவிற்கு வந்து 25 வருடங்கள் ஆனதை!

முதன்முதலில் வாங்கிய கார்:
மாருதி 800.

சூர்யா: கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு மிக்கவர்.

கடைப்பிடிக்கும் ஒரு பாலிஸி:‘வெற்றியை கொண்டாடியதில்லை. தோல்வியில் துவண்டதில்லை!’

முதன்முதலில் ஆட்டோகிராப் வாங்கியது: ‘கல்லுக்குள் ஈரம்’ நாவலை எழுதிய ர.சு.நல்லபெருமாளிடம்!

மொபைல் பிக்சர் quotes: When a pot full of water can be emptied by a small hole, similarly little ANGER or EGO
can drain all the nobility of a good heart.

நல்ல பழக்கம் : ‘பிடிச்சதை செய்’

பயணத்திற்கு: ஆடி க்யூ7.

அடிக்கடி சொல்லும் வார்த்தை: ‘சொதப்பிடாதே...’

பிடித்த லொகேஷன்: கடலும், கடல்சார்ந்த இடங்களும்!

வீட்டிலிருந்தால்...: தோட்டக்கலை வல்லுநர். ஹோம் கார்டனிங்.

மை.பா