வாசகர் கவிதைகள்



Untitled Document Untitled DocumentUntitled Document


விவாகரத்து
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு நரகத்தில் முடிவுக்கு வருகின்றன அநேக திருமணங்கள்!
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
அன்பு
முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய் வருந்தினாள்... மகனுக்கு வயதாவதை நினைத்து!
- நா.கி.பிரசாத், கோவை.
கடவுள்
சன்னிதானம் செல்லாதவன் கடவுள் ஆகிறான் அன்னதானத்தால்...
- வீ.உதயக்குமாரன், வீரன்வயல்.
அனுபவம்
வீட்டில் கடிகாரம் தாமதமாக ஓடுகிறது என்பதை தாத்தா கண்டுபிடித்து சொன்னார்... சூரியனைப் பார்த்து!
- மு.பெரியசாமி,விட்டுக்கட்டி.
பாடம்
நிரம்பிவழியும் உண்டியலை என்னிடம் வந்து நீட்டிய குழந்தையைப் பார்த்து கற்றுக்கொண்டேன்... இனியாவது சேமிக்கலாம் என்று!
- தென்கரை சி.சங்கர், வந்தவாசி.
நோ டென்ஷன்
சிமென்ட், செங்கல், மணல் விலை உச்சத்துக்கு ஏறிவிட்டாலும் கவலைப்படாமல் ஸ்டிராங்காக கட்டினான் செலவில்லாமல், 'மனக்கோட்டை'யை!
- ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.
வெறுமை
வயல்வெளியை விற்றுவிட்டோம். வாங்குவதற்கு யாருமற்று வீட்டில் வெறுமையாய் நிற்கிறது நெற்குதிர்!
- பெ.பாண்டியன், காரைக்குடி.