நியூஸ் வே





‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்து லுங்கி டான்ஸ் ஹிட் ஆகிவிட, இப்போது எல்லா இந்திப் படங்களிலும் அதே மாதிரி லுங்கி டான்ஸை அவசர அவசரமாக திணிக்கிறார்கள். தமிழிலும் அதே பாணியில் ஒரு ஆட்டம் போட தனுஷ் படத்தில் தீர்மானித்து இருக்கிறார்கள்.

எப்படியாவது ‘வெளியே’ வந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் பவர் ஸ்டார். ஆனால் வரிசையாக போட்டுத் தாக்க ரிடர்ன் செக்கை வைத்துக் கொண்டு பத்துப் பேர் ரெடியாக இருக்கிறார்கள். இந்த வருஷம் தீபாவளி உட்பட பவருக்கு ‘வேலூர்’தான்.

நினைத்த நேரத்திற்கு ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ இரண்டிற்கும் கால்ஷீட் தருகிறார் சிம்பு. காதலுக்கு டைம் வேணுமில்லையா? அடுத்தடுத்து தீவிரமாக கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார். பாண்டிராஜ் படம்தான் அவருக்கு இப்ப ரொம்ப இஷ்டமாக இருக்கிறது என்கிறார்கள்.

அதர்வாவுடன் அது இது என்று மீடியா செய்தி கொளுத்திப் போட்டபிறகு பத்திரிகையாளர்களிடம் வாய் திறக்கவே பயப்படுகிறார் ஜனனி அய்யர். ‘தெகிடி’ தவிர ஜனனியின் கைவசம் இப்போது படங்கள் இல்லை.

‘‘முழுக்கதையையும் டீடெய்லாக சொல்லிவிட்டால் போதும், நம்ம இரண்டு பேருக்குமே நல்லது’’ என கவுதம் மேனனிடம் ரொம்ப அன்பாக சூர்யா சொல்லிவிட்டதால், முழு தயாரிப்பில் வேலை நடக்கிறது. சீக்கிரம் ஷூட்டிங் புறப்பட்டு விடுவார்கள்.

ஹன்சிகாவுக்கு கிருஷ்ணன் என்றால் உயிர். ‘‘அப்போ சிம்பு...’’ என்று பதற்றப்படாதீர்கள். கடவுள் கிருஷ்ணன்தான் அவர். தனது பெட்ரூமில்கூட பெரிய அளவு கிருஷ்ணர் படத்தை வைத்திருக்கிறார் ஹன்சிகா. படத்துக்குக் கீழே, ‘நானே உனது குடும்பத்தைக் காக்கும் தலைவன். நானிருக்க பயம் கொள்ளவேண்டாம்’ என்ற வாசகம் பளிச்சிடுகிறது.

தெலுங்கில் நாகசைதன்யா ஜோடியாக தமன்னா நடித்துக்கொண்டிருந்த ‘ஹலோ பிரதர்ஸ்’ படம் டிராப் ஆகிவிட்டது. பட்ஜெட்டை சமாளிக்க முடியாததால் தயாரிப்பாளர் இந்த முடிவை எடுக்க, கன்னத்தில் கைவைத்து கவலைகொள்கிறார் தமன்னா.

‘ஜிகர்தண்டா’ - கார்த்திக் சுப்புராஜ் ‘பீட்சா’வுக்குப் பிறகு செய்கிற படம். சினிமாவிற்குள் சினிமா வருகிற மாதிரி எடுக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்கிறார் ஹீரோ. அது கொடூரமான வில்லன்கள் நிறைந்த மதுரையைப் பற்றிய கதை. ஸ்கிரிப்ட் ஓ.கே ஆகிறது. மதுரைக்கு போய் ஸ்டடி பண்ணுகிறேன் என புறப்பட்ட ஹீரோ, மதுரை ரவுடிகள் பயந்தாங்கொள்ளிகளாக இருப்பதைப் பார்த்து குழம்புகிறார். அடுத்து ஹீரோ(டைரக்டர்) என்ன செய்கிறார் என்பதுதான் கதையாம். முன்கதையே
நல்லாயிருக்கு பாஸ்!

சுந்தர்.சி - உதயநிதி காம்பினேஷன் ரெடி. உதயநிதியின் ‘நண்பேன்டா’, சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கும் படம் - இரண்டும் முடிந்த பிறகு இந்தப் படம் ஆரம்பிக்கும்.



சைலன்ஸ்
தஞ்சை மண்வாசம் வீசும் ‘திருட்டு’ படத்தைத் தயாரித்தவருக்கு, தான் அறிமுகம் செய்த ‘டிராயிங்’ நடிகை மீது அலாதி ப்ரியம். இடையில் முறிந்துவிட்ட நெருக்கத்தை புதுப்பித்துக் கொள்ள இப்போது தூதனுப்பிக் கொண்டிருக்கிறார் தயாரிப்பு.

வெளிநாட்டில் இருக்கிற ஜாலியில் ஒல்லி நடிகர் நாலைந்து வரிகளை காலையில் எழுந்து ட்வீட் செய்யப் போக, அது பற்றி எரிந்து கோட்டை வரைக்கும் போய்விட்டது. தெளிந்து பதறிய நடிகர் ஒரு வெள்ளைக் காகிதத்தில் விளக்கம் அளித்தாலும், அவரையும் வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார்களாம். வெளியூருக்குப் போய் சும்மா இருக்கக் கூடாதா என வீட்டிலிருந்து பலத்த எதிர்ப்பாம். ‘‘இவருக்கு ஏன் இந்த வேலை’’ என்று சூப்பரும் சொன்னாராம். ஊருக்குத் திரும்பவே பயப்படுகிறார் நடிகர். சண்டையெல்லாம் திரையில்தான் போடணும் பாஸ்!

பழைய ஜேம்ஸ்பாண்ட் நடிகரின் பெயர் கொண்ட நடிகரை புக் செய்தால், அவர் செய்யும் காதல் சேட்டைகளுக்குத்தான் யூனிட்டில் அலறுகிறார்கள். ஹீரோயின்களோடு போடும் ‘கடலை’, கடலை மீறுகிறதாம். அதனால் ஹீரோயின் கேரவனுக்கு பக்கா செக்யூரிட்டி போட்டு, ‘‘அம்மா மேக்கப்பில் இருக்காங்க’’, ‘‘தூங்குறாங்க’’, ‘‘அவங்க அப்பாவோட பேசிட்டு இருக்காங்க...’’ என பல காரணங்களைச் சொல்லி வெளியே அனுப்புகிறார்களாம். விரல் நடிகரும் இவரும் பயங்கர தோஸ்த் என்பதிலிருந்தே விஷயம் புரியவில்லையா?


‘வழக்கு எண் 18/9’
மனீஷாவின் கால்ஷீட் டைரியில் ‘ஜன்னல் ஓரம்’ உட்பட அரை டஜன் படங்கள் இருக்கின்றன. பெரிய நடிகர்களுக்கு ஜோடியாகும் ஆசையில், தனது பல் வரிசையை சீரமைக்கத் திட்டமிட்டிருக்கிறார் மனீஷா.

‘வீரம்’ படத்தில் ஓடும் ரயிலில் அஜித் சண்டை போடும் காட்சியை குஜராத் அருகே படமாக்கி வருகிறார்கள். ‘ஹெலிகாப்டா’ என்ற நவீன கருவியில் கேமராவை வைத்து இந்தக் காட்சியை எடுக்கிறார்களாம்.ஸ்ரேயாவுக்கு பாலிவுட் இதுவரை அதிர்ஷ்ட பூமியாக அமையவில்லை.

‘மிட்நைட் சில்ட்ரனி’ல் பெயர் கிடைத்தாலும், ‘ஜில்லா காஸியாபாத்’தில் வரவேற்பு கிடைத்தாலும், தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை. கைவசம் இருக்கும் ‘புல் புல்புல் பண்டோக்’ படம், சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்கள் பற்றியது. ‘‘இந்தப் படம் வாய்ப்புகளைக் கொண்டுவந்து கொட்டும்’’ என்கிறார் ஸ்ரேயா.

ஸ்ரேயாவுக்கு பாலிவுட் இதுவரை அதிர்ஷ்ட பூமியாக அமையவில்லை. ‘மிட்நைட் சில்ட்ரனி’ல் பெயர் கிடைத்தாலும், ‘ஜில்லா காஸியாபாத்’தில் வரவேற்பு கிடைத்தாலும், தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை. கைவசம் இருக்கும் ‘புல் புல்புல் பண்டோக்’ படம், சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்கள் பற்றியது. ‘‘இந்தப் படம் வாய்ப்புகளைக் கொண்டுவந்து கொட்டும்’’ என்கிறார் ஸ்ரேயா.

போலியாக ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பெயரில் முகநூல் பக்கம் தொடங்கி, அதில் பல பெண்களும் வந்து ரசிகைகளாக தங்களைப் பதிவு செய்ய, ஃபேக் ஐ.டி தன் வேலையை ஆரம்பித்தாராம். விழித்துக்கொண்ட ஒரு ரசிகை ஒரிஜினல் ரவிவர்மனுக்கு தகவல் தர, அவர் சைபர் க்ரைமில் புகார் கொடுத்திருக்கிறார். சுதாரித்துக் கொண்ட ஃபேக் ஐ.டி, முகநூலிருந்து ஓடிவிட்டார். ஆர்யாவும் இதே சிக்கலில் இருக்கிறார் என்பது லேட்டஸ்ட் நியூஸ். ஜாக்கிரதையாக இருங்க பொண்ணுங்களா!

கொஞ்சம் கொஞ்சமாக மிகப் பெரிய டைரக்டர்கள் வரிசையில் இடம் பெற்றுவிட்டார் பிரபுதேவா. தமிழ் சினிமாவிலேயே பெரிய சம்பளம். மும்பையில் புதுவீடு வாங்கி விட்டார். மாதம் இரு முறை சென்னை வந்து, குழந்தைகளை அம்மா வீட்டிற்கு வரச் சொல்லி, அவர்களோடு நேரம் செலவழிக்கிறார். டில்லிக்கு ராசாவா இருந்தாலும் வீட்டிற்கு அப்பாதான்!