வைரல் சம்பவம்



‘‘என் வீட்டிலிருந்து எடுத்துட்டுப் போன பணம், கேமரா எல்லாத்தையும் நீயே வைத்துக்கொள். எனக்கு எதுவும் வேண்டாம். ஆனால், கேமராவில் உள்ள மெமரி கார்டை மட்டும் எனக்குத் திருப்பிக் கொடுத்துவிடு.
என் வீட்டின் தாழ்வாரத்திலோ அல்லது அஞ்சல் பெட்டியிலோ மெமரி கார்டை போட்டு விடு அல்லது கீழே நான் கொடுக்கும் முகவரிக்கு அனுப்பி விடு. அந்த மெமரி கார்டில்தான் என்னுடைய செல்ல நாயின் புகைப்படங்கள் இருக்கிறது. அவள் சில நாட் களுக்கு முன் இறந்துவிட்டாள்.

அந்தப் புகைப்படங்களுக்கு பதிலீடாக என்னிடம் எதுவு மில்லை. அதை என்னால் இழக்க முடியாது...’’ என்ற கடிதம்தான் இணையத்தில் செம வைரல். கனடாவின் ஒன்டாரியாவில் உள்ள ஒருவர் தான் இந்த நெகிழ்ச்சியான கடிதத்துக்குச் சொந்தக்காரர். அவரின் பெயர் வெளியிடப்படவில்லை. இந்தக் கடிதத்தைப் படித்த பிறகு திருடன் மெமரி கார்டைக் கொடுத்துவிடுவான் என்பதுதான் இணையவாசிகளின் நம்பிக்கை.