உணர்வுப் பதிவு




Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine



     “இயந்திரத்தனமான மனித வாழ்க்கையில் உணர்வுகளுக்கு மதிப்பு குறைந்துள்ளது. பண உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிற உலகில் மன உணர்வுகளின் பதிவுதான் சுவாமி சினி ஆர்ட்ஸ் சார்பாக ரேவதி துரைமுருகன் தயாரிக்கும் ‘செங்காத்து பூமியிலே’. வறண்டு போன பூமியில் கூட இன்னும் வற்றிப்போகாத மனித உறவுகளை யதார்த்தமாக பதிவு செய்துள்ளேன்.

கதையின் நாயகர்களாக பவன், ‘தவமாய் தவமிருந்து’ செந்தில் நடிக்கிறார்கள். நாயகிகளாக பிரியங்கா, சுனுலட்சுமி நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சிங்கம்புலி, அழகன் தமிழ்மணி உள்ளிட்ட அத்தனை பேரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். மதுரை, தேனி மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்துக்கு மண் வாசனையுடன் இளையராஜா இசையமைத்துள்ளார். படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் ஒரு சொட்டு கண்ணீராவது சிந்துவது நிச்சயம்’’ என்கிறார் இயக்குனர் ரத்னகுமார்.
 எஸ்