நோக்கம் என்ன?
சரோஜாதேவி பதில்கள்
* காமத்தின் உச்சக்கட்டம் எது? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு. இதென்ன சார் கேள்வி? உச்சக்கட்டம்தான் உச்சக்கட்டம்.
* ஷார்ட்டா ஒரு காதல் கதை சொல்லுங்களேன். - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. “I am still Virgin”. அவளுடைய டீஷர்ட்டில் மேடிட்ட இடத்தில் அந்த வாசகத்தை கண்டதுமே அவள் மீதான தீராக்காதலில் விழுந்தான். பாவம், அவன் டீஷர்ட்டின் பின்பக்க வாசகத்தை கவனிக்கவில்லை. அங்கே “This is my Old T-Shirt” என்று எழுதியிருந்தது.
* முதல் இரவின் நோக்கம் என்ன? - கே.முருகன், திருவண்ணாமலை. பால், பழம் குடிப்பது.
* சாமத்தின் எல்லை விடியல், காமத்தின் எல்லை? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. கடவுள் என்று சில சாமியார்கள் சொல்கிறார்கள்.
* சந்துலே சிந்து பாடுவது என்றால் என்ன? - த.சத்தியநாராயணன், அயன்புரம். நீங்கள் என்ன அர்த்தத்தில் கேட்கிறீர்களோ? சிந்து என்பது செய்யுள் வகையில் ஒன்று. சந்தத்தில் சிந்து பாடுவது என்பதே ‘சந்துலே சிந்து’ என்று மருவிவிட்டது.
|