ஓவியம் வரையும் ஓவியம்!



‘ரீடர்ஸ் வாய்ஸ்’ பகுதி சம்பந்தமாக அயன்புரம் த.சத்தியநாராயணனின் அறிவுபூர்வமான கேள்விக்கு மனித நேய உணர்வுடன் தாங்கள் பதில் கூறியிருந்த விதம் மெச்சத்தக்கது. வாசகர் சார்பில் நன்றி.
- நெல்லை குரலோன், பொட்டல்புதூர்; மனோகர், மேட்டுப்பாளையம்.

ஆஸ்திரேலியாவின் வெள்ளை மணல் கடற்கரை பற்றிய செய்தியைப் படிக்கும்போதே ‘நம்மூரா இருந்தா சிலிக்கா மணலை அதிகாரத்திலுள்ள ஆதிக்க சக்திகள் ஒரு வழி பண்ணி இருப்பாங்களே...’ என்ற எண்ணம்தான் எழுந்தது.
-  ஆத்மநாதன், ஆற்காடு; நெல்லை குரலோன், பொட்டல்புதூர்; சந்திரமதி, சென்னை; கீதா, கோவில்பட்டி.

தொற்றுநோய் லிஸ்ட்டில் புற்றுநோய் இல்லாவிட்டாலும், அதைவிட வேகமாகப் புற்றுநோய் பரவி வருவதில் இருக்கிற ஆபத்தை அரசுக்கு சரியான நேரத்தில் உணர்த்தியிருக்கிறீர்கள்.
- கணேசன், மூவரசம்பேட்டை; கருணாகரன், போரூர்; சாந்தாராம், பம்மல்; சங்கரன், பழவந்தாங்கல்; அமிர்பத்ரா, மடிப்பாக்கம்; மனோகர், கோவை; கதிரவன், மதுரை.

‘டேட்டா கார்னரி’ன் தகவல்படி புலிகளின் தாம்பத்யம் சிறந்தோங்கி வருவதால் காட்டிலாகா ஊழியர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது!
- சரண் சுதாகர், வேளச்சேரி; ராஜம் தம்பையா, மாம்பலம்; வேலு, உள்ளகரம், ஜெயசந்திரபாபு, மடிப்பாக்கம்; ஜெர்லின், ஆலந்தூர்.

‘தொல்(லைக்) காப்பியத்’தின் விருதுகள் எண்ணிக்கையில் 50 என்கிற எல்லை வைத்துவிடாதீர்கள் தலைவா... இன்னமும் தொடருங்கள்!
- ஆசிகா, வியாசர்பாடி;  கவுரிநாத், பரங்கிமலை; இலக்சித், மடிப்பாக்கம்; ஆர்.ஜெ.சி, சென்னை; மியாவ்சின், கே.கே.நகர்; பப்பு, அசோக் நகர்; நிலவழகு, நீலாங்கரை; செம்மொழி, சேலையூர்; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; பிரேமா குரு, சென்னை; ப.மூர்த்தி, பெங்களூரு.

தனுஷின் ‘பட்டாஸா’கப் புறப்படுகிற திரைப்படம் ராக்கெட்டாய் உயர்ந்து சென்று வெற்றிப் பூச்சொரி
யும்.
- ஜெயராமன், கோவிலம்பாக்கம்; கலிவரதன், கீழ்க்கட்டளை; பிரேமா பாபு, சென்னை; முகம்மது உஸ்மான், மூலக்கடை.

‘முகம் மறுமுகம்’ பகுதியில் ஹன்சிகாவின் கைவண்ணத்தை கண்டபிறகு அடடே! ஓவியமும் ஓவியம் வரைகிறதே என்று எங்களை வியப்பில் ஆழ்த்தியது.
- சங்கீதசரவணன், மயிலாடுதுறை; ஏஞ்சலின், அசோக் நகர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; முரளி, நங்கநல்லூர்; கோவிந்தராஜ், தில்லை கங்கா நகர்.

81 வயதிலும் 18 வயதினரையும் சுண்டி இழுக்கும்படியான படங்கள் வரையும் ரங்கநாதன் மாருதியின் பேட்டி அவரது பல்வகை ஓவியங்களைப் போல  மனதைக் கவர்ந்தது.
- க.நஞ்சையன், பொள்ளாச்சி; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

ரீடர்ஸ் வாய்ஸ்