பிகினி பேய்!



ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘அகிரா’ படத்தின் மூலமாக இந்திக்குப் போகிறார் ராய்லட்சுமி. “தென்னிந்திய மொழிகளிலேயே தொடர்ச்சியாக நடித்துவரும் நான், பாலிவுட்டிலும் ஜெயிக்க ஆசைப்படுகிறேன். அதற்காகத்தான் மும்பையில் குடியேறியிருக்கிறேன். அங்கு தனியாகத்தான் இருக்கிறேன். கர்நாடகாவில் பெற்றோரும், சகோதரியும் வசிக்கிறார்கள். அதனால் அங்கும் அடிக்கடி செல்வேன். சென்னையில் சொந்தவீடு இருந்தாலும், அங்கே இருப்பது ரொம்ப குறைவு.



பாலிவுட்டில் நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தபோதுதான் ‘மெளனகுரு’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘அகிரா’ வாய்ப்பு கிடைத்தது. அடுத்து ‘ஜூலி-2’. இந்த படத்தில் முக்கியமான ஒரு காட்சிக்காக பிகினி அணிந்திருக்கிறேன். இந்த காட்சிக்காக ஜிம்மில் கடுமையாக பயிற்சி செய்து உடல் எடையை குறைத்திருக்கிறேன்” என்றார் ராய் லட்சுமி. தமிழில் ‘சவுகார்பேட்டை’ படத்தில் கவர்ச்சியான பேயாக நடித்திருக்கிறார் என்பது நமக்கு கூடுதல் கிளுகிளு தகவல்.