ஹவுஸ் ஒய்ஃப் ஷிவதா!



மலையாள நடிகை ஷிவதா நாயர், தமிழில் ‘நெடுஞ்சாலை’ படத்தில் அறிமுகமானார். நன்றாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர், ஏனோ இன்னமும் இளம் முன்னணி நடிகர்களின் பார்வையில் படவில்லை. அதனால்தான், தமிழில் சின்னச்சின்ன படங்களில் நடித்து வருகிறார். “தமிழில் மூன்று, மலையாளத்தில் ஒன்று, கன்னடத்தில் ஒன்று என நடிப்பில் பிஸியாகி விட்டேன். ஹவுஸ் ஒய்ஃப் கேரக்டரில் நடித்துள்ள ‘ஜீரோ’, ரசிகர்கள் மத்தியில் எனக்கென்று ஒரு தனி இமேஜை உருவாக்கும்.



அடுத்து பாபி சிம்ஹாவுடன் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தில் நடிக்கிறேன். இதில் நான் ஏற்கும் வேடம் வித்தியாசமாக இருக்கும். அடுத்து ‘முரண்’ ராஜன் மாதவ் இயக்கும் ‘கட்டம்’ படத்தை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நந்தனனுக்கும் நிவாசுக்கும் எனக்குமிடையே நடக்கும் சம்பவங்கள்தான் கதை. ஒரே நாளில் நடந்து முடியும் கதை. மலையாளத்தில் ஜெய்சூர்யாவுடன் நடித்த படம் விரைவில் ரிலீசாகிறது. இதில் எனக்கு டாக்டர் கேரக்டர். கன்னடத்தில் சிவராஜ் குமாருடன் ஒப்பந்தமாகி இருக்கிறேன். தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். தற்போது கிளாசிக்கல் நடனம் குறித்து படிக்கிறேன். இதற்கான தேர்வு சமீபத்தில் நடந்தது. அதில் பங்கேற்ற நான், ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறேன்” என்றார் ஷிவதா.

- தேவராஜ்