அம்மா ஆக ஆசை!



கடவுளின் தேசத்து சேச்சிகளை தொடர்ச்சியாக நாம் இறக்குமதி செய்து கொண்டிருக்கும் நேரத்தில், கேரள இளைஞர்களை கிறங்கடித்துக் கொண்டிருக்கும் தமிழச்சி நம்ம சாய்பல்லவி. ‘பிரேமம்’, ‘கலி’ என்று அடுத்தடுத்து ஏறிக்கொண்டே போகும் அவரது ஹிட்ரேட்டை அங்கிருக்கும் நடிகைகள் கலவரமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக ஒரு நடிகையிடம் உங்க லட்சியம் என்ன வென்று கேட்டால், “நம்பர் ஒன் ஆகணும்”, “தேசிய விருது வாங்கணும்” என்பது மாதிரிதான் சொல்லுவார்கள்.

சாய்பல்லவியிடம் இந்த கேள்வியை கேட்டபோது, “அம்மா ஆகணும்” என்று சொல்லி கேள்வி கேட்ட நிருபரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார். அதுவும் பெண் குழந்தைக்கு தாயாவதுதான் அவரது விருப்பமாம். “தாய்மைதான் ஒரு பெண்ணுக்கு இயற்கை அளித்திருக்கும் உச்சபட்ச கவுரவம்” என்று அதற்கு விளக்கமும் அளித்திருக்கிறார். டாக்டரம்மா ஆச்சே? சொன்னாங்கன்னா சரியாதான் இருக்கும்!