ஒத்திகை!



சரோஜாதேவி  பதில்கள்

* அரண்டவனுக்கு இருண்டதெல்லாம்...?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
தப்பான பழமொழி. அரண்டவனோ, மருண்டவனோ... இருட்டுன்னா பாய்ஞ்சிடுவாங்க.

* செல்ஃபீ எடுக்கும்போது பெண்கள் உதட்டைச் சுழிப்பது ஏன்?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
வேறு எதை சுழிக்கணும்?

* டேட்டிங் என்பது என்ன?
- பொ.சின்னராஜா, குற்றாலம்.
அரங்கேற்றத்துக்கு ஒத்திகை.

* கண்களால் பேச முடியுமா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
வாயால் மட்டும்தான் பேசலாம், மற்ற விஷயங்களை காட்டலாம்.

* மனைவிக்கு முதுகு தேய்த்துவிடலாமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
இன்னும் 1980களிலேயே இருக்கீங்களே? இந்தக் காலத்துப் பசங்க எவ்வளவோ முன்னேறிட்டாங்க.