நேர்காணல்!



‘‘கட்சிக்காக என்ன பண்ணியிருக்கீங்க?’’
 ‘‘கட்சி போராட்டத்துல மூணு பஸ்ஸை கொளுத்தியிருக்கேன்... ரெண்டு பேரைத் தீர்த்திருக்கேன்!’’
 ‘‘கட்சிக் கொள்கைகளைத் தெரியுமா..?’’
 ‘‘உங்களைத் தவிர யாரையும் தெரியாது... தெரிய வேண்டியதும் இல்ல!’’
 ‘‘எப்படி ஜனங்ககிட்டே ஓட்டு கேப்பீங்க..?’’

 ‘‘உங்க கையை காலா பிடிச்சுக் கேட்கிறேன்... வாக்கு பிச்சை போடுங்கன்னு கெஞ்சுவேன்!’’
 ‘‘ஜெயிச்சதும் என்ன சொல்வீங்க..?’’
 ‘‘எம்.எல்.ஏ பதவி தலைவர் எனக்கிட்ட பிச்சைன்னு சொல்லுவேன்..!’’
 ‘‘பதவிக் காலத்துலே என்ன பண்ணுவீங்க..?’’
 ‘‘உங்களுக்கு வசூல் பண்ணி தந்துக்கிட்டே இருப்பேன்..’’
 ‘‘அரசியல் சட்டம்னா என்ன..?’’

 ‘‘உங்க திருவாய்லேர்ந்து வர்ற வார்த்தை ஒவ்வொண்ணும்..!’’
 ‘‘உங்க பதவி எவ்வளவு காலம்..?’’
 ‘‘நீங்க மனசு வைக்கிற வரைக்கும்..!’’
 ‘‘செலவு பண்ண வசதியிருக்கா..?’’
 ‘‘மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளைன்னு கோடி கோடியா அடிச்சிருக்கேனே!’’
 ‘‘மக்களுக்காக என்ன செஞ்சீங்கனு யாராவது கேட்டா..?’’
 ‘‘செஞ்சுருவேன்...ம்பேன்..!’’

தாமு