குங்குமம் டக்கீஸ்



* தெலுங்கில் ‘நாயகி’ நன்றாகப் போகாததில் த்ரிஷா அப்செட் ஆகி, வெளிநாட்டுக்குக் கிளம்பிவிட்டார். இனி ஹிட் ஃபார்முலாவுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்கத் தீர்மானித்திருக்கிறார்.



* அஜித் - சிவா இணையும் படத்தின் ஹீரோயின் தேர்வுக்கு நிறையப் பேர் பரிசீலனையில் வந்தார்கள். போனார்கள். முதலில் பரீட்சைக்கு வந்த காஜல் அகர்வால்தான் இப்போது செலக்ட் ஆகியிருக்கிறார்.

* தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ‘‘நான் கல்யாணமும் செய்துகொள்ளப் போவதில்லை. கர்ப்பமாகவும் இல்லை’’ என கோபமாகச் சொன்னார் தீபிகா படுகோனே. ஆனால் இதில் கரீனா கபூர் அப்செட் ஆகிவிட்டார். ‘‘கல்யாணம் பற்றி கருத்து சொல்லட்டும், தப்பில்லை. கர்ப்பமாக இல்லை என ஏன் சொல்ல வேண்டும்? என்னைக் குத்திக் காட்டுகிறாரா?’’ என கேட்கிறார் அவர். காரணம், கரீனா கர்ப்பமாக இருக்கிறார். 

* விக்ரம் பிரபு நடிக்கும் ‘நெருப்புடா’ படக் கதையும், துஷ்யந்த் நடித்து முன்பு வெளியான ‘மச்சி’ படக் கதையும் ஒன்றாம். ஒரே குடும்பத்தில் இதுகூட தெரியவில்லையா என டைரக்டர் மூலம் இந்தக் கதையைக் கேட்டவர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள்.



* ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ படத்தில் சில ேபார்ஷன்கள் முடிவடைந்து விட்டன. இப்போது சிம்பு - ஸ்ரேயா பாடல் காட்சியை சென்னையில் எடுக்கிறார்கள்.

* ‘நான்தான் பாலா’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஹீரோவாகிறார் விவேக். கமாலினி முகர்ஜி ஹீரோயின். படத்தின் பெயர், ‘துப்பறியும் சங்கர்’ என்கிறார்கள். 1960களில் நடக்கும் கதை இது.

* பரதனை அழைத்த விஜய், ‘‘கொஞ்சம் பன்ச் வசனங்கள் இருந்தால் பரவாயில்லை, ஓவராக வேண்டாம்!’’ எனச் சொல்லியிருக்கிறார்.

* எழில், கௌரவ், புது இயக்குநர் தளபதி படம் என மூன்றிலும் உதயநிதி நடிக்கிறார். இந்த மூன்றிலுமே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சூரி.

* ‘கபாலி 2’ அறிவிப்பை உடனே வெளியிட்டுவிடலாமா எனக் கூடிப் பேசுவதற்காக ரஜினி, தாணு, இரஞ்சித் மூன்று பேரும் சேர்ந்து உட்காரப் போகிறார்கள். ஒரு வாரத்தில் இது முடிவாகிவிடும்.

* அமெரிக்காவிலிருந்து திரும்பிய ரஜினி, ஆகஸ்ட் இரண்டாம் வாரம் முதல் 20 நாட்கள் ‘2.0’ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். சண்டைக் காட்சிகளை ஆறப் போட்டுவிட்டு முதலில் ரிலாக்ஸாக ஒரு பாடல் காட்சியைப் படமாக்குகிறார் ஷங்கர்.

* நட்பைப் பேணுவதில் ஹீரோக்களைப் போல ஹீரோயின்கள் கிடையாது என்பதை மறுத்திருக்கிறது டோலிவுட் கதாநாயகிகளின் கூட்டணி. சமந்தா, ரகுல் ப்ரீத்சிங், ரெஜினா கஸன்ட்ரா இவர்கள் மூவரும் நெருங்கிய தோழிகள். மூவருக்கும் நேரம் கிடைக்க, ஜாலி டூராக பெல்ஜியம் பறந்திருக்கிறார்கள்.

* சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தைத் தள்ளி வைத்துவிட்டு, ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’வில் கவனம் செலுத்தி வருகிறார் கௌதம்மேனன். அதன் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

* ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் இந்தி ரீமேக்கை மணிரத்னத்தின் உதவியாளரான பிஜோய் நம்பியார் இயக்குகிறார். பிரபு கேரக்டரில் ஹர்ஷ்வர்தன் ராணே ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார். கார்த்திக் கேரக்டரில் தனுஷ் நடிக்கலாம் என தகவல்.

* மருத்துவமனையில் இருக்கும் கமல் நிறைய புத்தகங்கள் படிக்கிறார். நேரம் இல்லாமல் விட்டிருந்த எழுத்து வேலையை அவர் தொடர, ஒரு தொகுப்பிற்கான கவிதைகள் இந்தக் காலக்கட்டத்தில் குவிந்துவிட்டதாம். இந்த வாரம் ரஜினி அவரைச் சந்திப்பார் என்கிறார்கள்.

* சிவகார்த்திகேயன், நயன்தாரா சேர்ந்து நடிக்க இருக்கும் மோகன்ராஜா படத்திற்கு இனிதான் போட்டோ செஷனே நடக்கப் போகிறது. படத்தை இப்போதே விலைக்கு வாங்கிக்கொள்ள மூன்று கம்பெனிகள் ரெடி!

* ஷங்கரின் ‘2.0’வில் நடிப்பது பற்றி மௌனம் கலைத்திருக்கிறார் எமி ஜாக்‌சன். ‘‘என்னோட லைஃப் டைம்ல இப்படி ஒரு படம் இனியும் அமையுமானு தெரியாது. மறுபடியும் ஷங்கர், அக்‌ஷய்குமாருடன் வொர்க் பண்ணுவது அமேஸிங்’’ என சிலிர்க்கிறார் எமி.