நீருக்கடியில் மேஜிக்



ஐரோப்பாவில் ஹாட் டாக்கே மார்ட்டின் ரீஸைப் பற்றியதுதான். இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மேஜிக் நிபுணர் மார்ட்டின் ரீஸ். கொரோனா காலத்தில் ஆன்லைனில் மேஜிக் செய்து லைக்குகளை அள்ளினார். வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்த மக்களுக்கு தன்னுடைய மேஜிக் மூலம் மகிழ்ச்சியைத் தந்து ஹீரோவானவர் இவர்.  

ரீஸின் ஷோவை நேரில் பார்க்க வேண்டும் என்று லட்சக்கணக்கானோர் ஆர்வம் தெரிவித்திருந்தனர். இங்கிலாந்தில் ஓரளவுக்கு சகஜ நிலை  திரும்பிவிட்டாலும் மக்கள் கூடுவதை தவிர்க்கின்றனர்.

அதனால் இன்னும் அவரால் நேரடியாக ஷோ எதுவும் நடத்தமுடியவில்லை.
இந்நிலையில் 3 நிமிடங்கள் தண்ணீருக்குள் இருந்துகொண்டே 20 விதமான மேஜிக் வித்தைகளை செய்து அசத்தியிருக்கிறார் ரீஸ்.

இந்த ஆச்சர்ய மேஜிக் ஷோ வீடியோவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவிட்டது. அத்துடன் இதுவரை யாருமே இப்படி மேஜிக் செய்யவில்லை என்று கின்னஸ் கமிட்டியும் ரீஸைப் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது.

த.சக்திவேல்