கல்யாணத்திற்கும் கவர்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை!



இதைத்தான் தன் சினிமா பாலிசியாக வைத்திருக்கிறார் காஜல் அகர்வால்.இதனால்தான் தனக்கு திருமணமாகி, குழந்தை பிறந்த ஆறாவது மாதமே சினிமாவில் நடிக்க கிளம்பி வந்துவிட்டார். ஆறு மாத குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காகவே அக்ரிமெண்ட்டில் இரண்டு நிபந்தனைகளையும் சேர்த்தே குறிப்பிட்டு இருக்கிறாராம்.
ஒன்று, ஷூட்டிங் வரும் போது, என்னுடைய ஆறு மாத குழந்தையையும் என்னுடன் அழைத்துவருவேன். அதனால் குழந்தை பாதுகாப்பாக இருக்க கேரவன் வசதி வேண்டும்.இரண்டாவதாக, என் குழந்தையைப் பார்த்துக் கொள்ள என்னுடன் என் அம்மாவும் வருவார். அம்மாவும் என்னுடன்தான் இருப்பார்.

தான் மீண்டும் நடிக்க வரும்போது, இப்படி இரண்டு நிபந்தனைகளுடன் கால்ஷீட் கொடுத்தார் காஜல் அகர்வால். எல்லாம் ஓகே என்று அவரை சமீபத்திய வைரல் நாயகன் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்கள். 

ஆனால், ‘பகவந்த் கேசரி’ என்ற படம் ஓடவில்லை.திருமணத்திற்கு முன்பாக அவர் நடிக்க ஒப்பந்தமான ‘இந்தியன் 2’, திருமணத்துக்குப்பிறகு தன் நிபந்தனைகளுடன் காஜல் நடித்துக் கொடுக்கும்படி வழிவகை செய்யப்பட்டது. அடுத்து, ‘சத்யபாமா’ என்ற காஜல் அகர்வாலை மையமாகக் கொண்ட படம் வெளியாக இருக்கிறது.

இந்த இரண்டு  படங்களும் வெளியாகி வெற்றி பெற்றால், அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும் என பெரும் நம்பிக்கையில் இருக்கிறார் காஜல் அகர்வால். ஆனால், திருமணமான நடிகைகளை சீனியர் ஹீரோக்கள் கூட ஜோடியாக நடிக்க வைக்க விரும்ப மாட்டார்களே என்று அவரது மானேஜர் தரப்பில் சொல்லப்பட்டதாம்.

பாலிவுட்டில் திருமணமான தீபிகா படுகோன், ஆலியா பட், கியாரா அத்வானி என எல்லோரும் கவர்ச்சியாக நடிக்கிறார்கள். கவர்ச்சிக்கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில் லை. அதேபோல் கவர்ச்சியில் முன்பை விட தாராளமாக நடிக்கத் தயார் என்று சொல்லுங்கள் என்று காஜல் அகர்வால் அன்புக்கட்டளை போட்டிருக்கிறாராம்.

காம்ஸ் பாப்பா