பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழக அரசில் வேலை!



*வாய்ப்பு
*475 பேருக்கு வாய்ப்பு!


தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்பிவருகிறது. டி.என்.பி.எஸ்.சி. அலுவலக உதவியாளர் முதல் அதிகாரி பணியிடங்கள் வரை பல கட்டங்களில் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.

 தமிழக அரசின் பொறியியல் பணி மற்றும் தமிழ்நாடு மின்னியல் ஆய்வகப் பணியில் உதவிப் பொறியாளர் மற்றும் அதற்கு இணையான பதவிகளில் (உதவி மின் ஆய்வாளர், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர்) 460 காலியிடங்களையும் தமிழ்நாடு கட்டடக்கலை பணியில் ஜூனியர் ஆர்க்கிடெக்ட் பதவியில் 15 காலியிடங்களையும் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இக்காலியிடங்கள் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, வேளாண்மைப் பொறியியல் உள்ளிட்ட துறைகளில் இடம்பெற்றுள்ளன.

  கல்வித்தகுதி: உதவிப் பொறியாளர் (வேளாண்மை பொறியியல்) பதவிக்கு பி.இ. (விவசாயம்), பி.டெக் (வேளாண் பொறியியல்) மற்றும் பி.இ. மெக்கானிக்கல், சிவில், ஆட்டோமொபைல், புரடக்‌ஷன், இண்டஸ்ட்ரியல் எஞ்சினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.   உதவி மின்னியல் ஆய்வாளர் பணிக்கு பி.இ. எலெக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் படித்திருக்க வேண்டும். தமிழ்வழியில் படித்தோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு உதவிப் பொறியாளர் (சிவில்) பதவிக்கு பி.இ. சிவில் எஞ்சினியரிங் பட்டதாரிகளும் உதவிப் பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) பதவிக்கு பி.இ. எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் எஞ்சினியரிங் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

  தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் பதவிக்கு பி.இ. மெக்கானிக்கல், புரடக்‌ஷன், இண்டஸ்ட்ரியல், எலெக்ட்ரிக்கல், கெமிக்கல் எஞ்சினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். ஜூனியர் ஆர்க்கிடெக்ட் பணிக்கு பி.ஆர்க். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.   தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த 20 சதவீத இடஒதுக்கீடு உதவிப் பொறியாளர் பதவிக்கும் பொருந்தும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

  தமிழகத்தில் சிவில், மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிப்புகள் மட்டும் அண்ணா பல்கலைக்கழகத் துறை கல்லூரிகள் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தமிழ்வழியிலும் வழங்கப்படுகின்றன. எனவே, தமிழ் வழியில் பி.இ. சிவில், பி.இ. மெக்கானிக்கல் படித்தோருக்கு உதவிப் பொறியாளர் சிவில், மெக்கானிக்கல் பிரிவுகளில் தமிழ்வழி ஒதுக்கீட்டிலும் வாய்ப்புகள் உள்ளன.

  விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய பொறியியல் பட்டதாரிகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 28.6.2019.

 விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட முழுமையான விவரங்களை அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.