சுவையில் பரிபூர்ணம், பூர்ணம் அப்பளம்



பூர்ணம், சமஸ்கிருதத்தில் முழுமை என்று அர்த்தம். இதன் பொருள் மாறாமல் தரத்துடன் சுவையான அப்பளத்தை தயாரித்து வருகிறது பூர்ணம்  அப்பளம் நிறுவனம். உயர்தரமான மூலிகை பொருட்களை கொண்டு தரமான முறையில் தயாரிக்கப்படுவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய வகையில் தயாரிக்கப்படுகிறது. பாரம்பரிய சுவையுடன் முழுக்க முழுக்க கைகளால் சுத்தமான முறையில்  தயாரிக்கப்பட்டு கண்கவரும் வண்ணப் பேக்கெட்டில் கிடைக்கிறது.

பூர்ணம் அப்பளம், 50 மற்றும் 100 கிராம் என இரண்டு விதமான பேக்கிங்கில் கிடைக்கிறது. பத்து ரூபாய் பேக்கெட்டில் மட்டும் 25% கூடுதலாக  வழங்கப்படுகிறது. மொறுமொறுவென்று இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். தின்ன தின்ன திகட்டாது என்பதால் குழந்தைகள் எவ்வளவு  வேண்டும் என்றாலும் மகிழ்ந்து உண்வார்கள். தரமான முறையில் தயாரிக்கப்பட்டு சாதாரண மக்களும் வாங்கி சாப்பிடக்கூடிய மலிவான விலையில்  விற்கப்படுகிறது. ஒரு முறை சுவைத்து பாருங்கள் வித்தியாசத்தை உணருங்கள்.

இது தமிழ்பால்

கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தின் முன்னணி பால் நிறுவனங்களில் ஒன்றாக சிறந்து விளங்கி வருகிறது G.K.டெய்ரி பால் நிறுவனம்.  ISO உணவு பாதுகாப்பு தரச்சான்றிதழ் பெற்றது மட்டுமில்லாமல், அதன் வழிமுறைகளை மிகவும் கட்டுப்பாட்டுடன் பின்பற்றி வருகிறது.  ‘அன்றைய  பால் அன்றைய தினமே’ என்ற தாரக மந்திரத்தை கடைப்பிடித்து வரும் G.K.டெய்ரி பாலின் மணம், சுவை, தரம் மாறாமல் மக்களுக்கு அளித்து  வருகின்றனர்.

தஞ்சை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் சுமார் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு வாழ்க்கை மேம்பட பால்  பண்ணை அமைத்து தரமான பாலை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். கொள்முதல் செய்யப்பட்ட பால்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் தர  பரிசோதனை செய்யப்பட்டு பேக்கிங் செய்யப்படுகிறது. பால் மட்டும் இல்லாமல் தயிர், மோர், வெண்ணை, நெய், பனீர், கோவா என பால் சார்ந்த  பொருட்களும் தரமான முறையில் அழகாக பேக்கிங்கில் வருகிறது.

சுவையை தூண்டும் சிறுதானிய கடலை மிட்டாய்

“மாநிலத்தின் முதன்மையான கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள்”  என்ற அடைமொழியுடன் களம் கண்டிருக்கும் இவர்களின் தயாரிப்புக்களாக கடலை  மிட்டாய், எள்ளு மிட்டாய், கொக்கோ மிட்டாய், கருப்பட்டி கடலை மிட்டாய் மற்றும் சிறுதானிய வகைகளை பாரம்பரியம் மற்றும் சுவை குறையாமல்  ஆரோக்கியத்தின் அடையாளமாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

எங்கள் நிறுவனத்திற்குள் நுழைந்ததுமே, ஒரு குடும்பத்திற்குள் நுழைந்தது போன்ற ஒரு உணர்வும் அனுபவமும் நிச்சயமாக கிடைக்கும் என்கின்றனர்.  உங்கள் வீட்டு நிகழ்ச்சிகள், திருமண வைபங்கள் மற்றும் பண்டிகை கொண்டாட் டங்களுக்குத் தேவையான இனிப்புகள், கடலை மிட்டாய், கேக்  வகைகள், சாக்லெட் போன்றவை தேவையான வடிவில், ருசியாகவும், சுவையாகவும் உங்கள் தேவைக்கேற்ற வடிவங்களில் தயார் செய்து தருகிறோம்  என்கின்றனர்.

உதய கிருஷ்ணா நெய்… இது உங்கள் வீட்டு நெய்…

அசல் நெய். தரம் நிரந்தரம் என்ற தாரக மந்திரங்களுடன் களம் காணும் உதய கிருஷ்ணா நெய், மணக்க மணக்க…ருசிக்க ருசிக்க… இனிப்பு மற்றும்  காரம் நிறைந்த பலகாரங்களைத் தயார் செய்வதற்கும் ஏற்ற வகையிலும், இட்லி, தோசைகளை நெய்யோடு  ருசித்து உண்ணவும் ஏற்ற மணத்தோடு,  பாரம்பரியம் மாறாமல், தரம், மணம், சுவை என்ற தாரக மந்திரத்தோடு தயாராகிறது. தரம் மிகுந்த உயர்தரமான பண்ணை மாடுகளின் பாலினைக்  கொண்டு தயாராகும் உதய கிருஷ்ணா நெய், கடுமையான தர கட்டுப்பாட்டுச் சான்றுகள் பெறப்பட்டு, அதன் வழிமுறைகள் மிகவும் சிறப்பாகப்  பின்பற்றப்படுகிறது.

மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சந்தைகளில் விற்பனையில் காலூன்றியதன் மூலம், நவீன உற்பத்தி திட்டத்துடன் மிகச் சிறந்த  தயாரிப்புகளை வழங்குகிறது. உதய கிருஷ்ணா நெய் 50 எம்.எல் முதல் 1 லிட்டர் வரை சுலபமாகக் கையில் எடுத்துச் செல்லும் வகையில் எளிய  பவுச்களிலும், 50 எம்.எல் முதல் 1 லிட்டர் வரை பிளாஸ்டிக் ஸ்டோரேஜ்களிலும், 1 லிட்டர் முதல் 5 லிட்டர் வரை டின்களிலும் வாடிக்கையாளர்களின்  விருப்பம்போல் கிடைக்கிறது. தரமான நெய் என்றால் அது உதய கிருஷ்ணா அசல் நெய்தான்…

தொகுப்பு: ப்ரியா மோகன்