பெரும்பாலான கதாநாயகிகள், தாங்கள் நடித்த படங்களின் பத்திரிகையாளர் சந்திப்பு, இசை வெளியீட்டுவிழா மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. அதற்காக செலவிடப்படும் நேரத்துக்கு வருமானம் கிடையாது என்பதுதான் அவர்களது பொறுப்பற்ற புறக்கணிப்புக்குக் காரணம்.
அவர்களுக்கெல்லாம் புத்திசொல்லி, பாடம் புகட்டுமள வுக்கு நடந்துகொண்டார் வேதிகா. அவரது ‘காவியத் தலைவன்’ மீடியா சந்திப்புக்காக, வேறொரு படத்தின் படப்பிடிப்புக்கு லீவு சொல்லிவிட்டு வந்து கலந்துகொண்டார்.