ரயில்வே ஸ்டேஷனில் தேசியக்கொடி!



இந்தியாவிலுள்ள 75 பிசியான ரயில்நிலையங்களில் நூறு அடியில் தேசியக்கொடிக் கம்பங்களை எமர்ஜென்சி வேகத்தில் இந்திய ரயில்வே துறையினர் அமைக்கவுள்ளனர். எதற்காக என்பதுதான் மக்களின் கேள்வி!  இப்போது மும்பையில் 7 நிலையங்களில் தேசியக்கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டு விட்டன. இதற்கான நிதி ரயில்வே மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து பெறப்பட்டுள்ளது.

“முதல் தர ரயில் நிலையங்களில் நூறு அடி கொடிக்கம்பங்கள் டிசம்பர் மாதத்தில் அமைக்கப்படும்...” என உறுதியாகச் சொல்கிறார் ரயில்வே போர்டு இயக்குநரான விவேக் சக்சேனா. “தேசியக்கொடியை ரயில்நிலையத்தில் அமைப்பது எப்படி பயணிகளுக்கு உதவும்?” என லாஜிக் கேள்வியைக் கேட்கிறார் மேற்கு ரயில்வே பயணிகள் கமிட்டி உறுப்பினரான ரத்தன் போடர். ஏழைத்தாயின் மகனிடம் கேட்கவேண்டிய கேள்வி இது!

ரோனி