ஒரே நேரத்தில் தனுஷ் ஜோடியாக ‘மயக்கம் என்ன’ படத்திலும், சிம்பு ஜோடியாக ‘ஒஸ்தி’ படத்திலும் நடிக்கும் ரிச்சாவுக்கு இரண்டு படத்திலும் டைட் ஷெட்யூல். ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்தவர், இப்போது ‘மயக்கம் என்ன’ ஒரு ஷெட்யூல் முடிந்ததும் சற்றே ரிலாக்ஸாகி இருக்கிறார். புத்துணர்ச்சி சிகிச்சை, நீண்ட நேர தூக்கம் என அடுத்த ஷெட்யூலுக்கு தயாராகிறார்.
‘பாடிகார்டு’ படத்தின் புரொமோஷனுக்காக சமீபத்தில் கான்பூர் போனார் சல்மான் கான். அவருக்கு காந்தி தொப்பி கொடுத்து, அன்னா ஹசாரேவின் போராட்டத்தை ஆதரிக்கக் கேட்குமாறு போனார்கள் சில மாணவர்கள். அவர்களை சல்மானின் பாடிகார்டுகள் அடித்து விரட்ட, இப்போது போலீசுக்கு போயிருக்கிறது புகார். ‘பாடிகார்டு’ படத்தை பிரபலப்படுத்த, பாடிகார்டை விட்டு அடித்திருப்பாரோ!
டும் டும் கொட்ட ரெடி...அடுத்த வாழ்க்கைக்கு யுவனும் தயாராகிவிட்டார். சுஜாயாவுடனான முதல் காதல் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த நிலையில் இசையே வாழ்க்கை என்ற முடிவுக்கு அவர் வந்தாலும், குடும்பத்தினர் அவருக்கு ஒருபக்கம் பெண்பார்த்து வந்தனர். பிடிகொடுக்காமல் இருந்த யுவனுக்கு இன்னொரு நேசம் டாக்டர் ஷில்பா வடிவில் வர, இரண்டு குடும்பத்தினரும் சேர்ந்திசைத்து அவர் திருமணத்தை முடிவு செய்தார்கள்.
இந்தத் திருமணத்தை ஊரைக்கூட்டாமல் சிம்பிளாக குடும்பம், குடும்பத்துக்கு நெருங்கியவர்கள் மத்தியில் நடத்த வேண்டும் என்கிற யுவனின் விருப்பப்படி, விநாயகர் சதுர்த்தியன்று திருப்பதியில் வைத்துக்கொள்வது என்று திட்டம் வைத்திருக்கிறார்கள்.
நண்பர்களுக்காகவும், சுற்றத்துக்காகவும் ஒரு வரவேற்பு வைக்க ஆர்ப்பாட்டத்தை விரும்பாத யுவனிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் வேண்டியவர்கள். கச்சேரி களை கட்டட்டும்..!
உம்மா!அன்னாவின் உண்ணாவிரதம் பற்றி, ‘ஊழலைவிட தீவிரவாதம்தான் ஒழிக்க வேண்டிய உடனடி வேலை’ என தன் ஸ்டேட்மென்ட்டை அவிழ்த்துவிட்ட ‘கட்ஸ்’ நமீதாவுக்கு சினிமாக்காரர்களும் பொருத்தமாகத்தான் வேடங்களைத் தருகிறார்கள். நமீ நடிக்கும் இரண்டு தெலுங்குப் படங்களில் ஒன்றை வர்மா இயக்க, அதில் காக்கிச்சட்டை போட்டுக்கொண்டு எதிரிகளைப் பந்தாடப் போகிறார் அவர். இன்னொரு பக்கம் ஒருபடி மேலே போய் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் படத்தில் சி.பி.ஐ ஆபீசராகவே வருகிறார் நமீ.
சமீபத்து சினிமா நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர்களை நோக்கி அவர் கொடுத்த ‘உம்மா’, மேடையிலிருந்த சேரனை உறுத்த, ‘‘உங்க வீட்டுப்பெண் இப்படி உம்மா கொடுக்கிறதை ரசிப்பீங்களா..?’’ என்று அவர் ரசிகர்களிடம் கேட்டபோது மேடையில் நமீ இல்லை. ஆனால் அடுத்த நாள் இணையத்தில் சேரனை மதித்து, ‘‘தப்பான எண்ணத்தை வளர்க்க நான் அப்படி நடந்துக்கலை. ரசிகர்களிடம் அன்பைக் காட்ட இப்படி உம்மா கொடுக்கிறது வழக்கமா இருக்கு..!’’ என்றார். பொங்கி வழியற அன்பும் தீவிரவாதம்தான் நமீ..!
ஜி