நாணயம்ஒவ்வொரு வெளியூர் பயணத்தின்போதும்ஒண்ணேகால் ரூபாய்முடிந்துவைக்கும்குலதெய்வத்துக்குஒன்றரை ரூபாய்முடிய வேண்டியதாயிற்று...இருபத்தி ஐந்து பைசாசெல்லாதாம்! எஸ்.சங்கர்,
திருப்பரங்குன்றம்.
ஞாபகங்கள்மனப்படுகையில் தேங்கிநிற்கும்மழைக்கால நிகழ்வுகளைஅசை போட்டபடிபரணில் கிடக்கும்கோடைக்காலங்களில் குடை! சிவபாரதி,
சிதம்பரம்.
எடைநல்லவனா கெட்டவனாஎப்படியென்று எடை போட முடியவில்லை...கையில் தராசு இருந்தும்நியாயவிலைக் கடைக்காரனின்மனசை! ஜெ.புதுயுகம்,
பண்ணந்தூர்.
தவம்குருவிக்கூட்டை காற்றுகலைத்துவிடாமல் இருக்கஒற்றைக்காலில் தவம் செய்கிறது மரம்! தஞ்சை கமருதீன்,
தஞ்சாவூர்.
பிரச்னைவிலாசம் தெரியாதபிரச்னைகளையும்விசாலமாய்விவாதித்துவிடுகின்றனதிண்ணைப் பேச்சுகள்! ஏ.டி.தமிழ்மணி,
தளிகைவிடுதி.
வீடுமணல்வீடு கட்டகற்றுத்தந்த அப்பாகடைசிவரை எங்களைவாடகை வீட்டில்தான்வசிக்கச் செய்தார்! வீ.சிவசங்கர்,
கள்ளக்குறிச்சி.