அன்புடன் அழைப்பவை மழைத்தும்பிகள்...




நீ வருகிற வரை
இங்கேதான்
இருந்தேன்

கண்களுக்குத் தெரியாமல்
பார்த்துக்
கொள்வதற்குப்
பெயர்தான்
இறுகத்
தழுவுதல்

தூங்க வைக்கத் தெரிந்தவர்களுக்கே
வாய்க்கிறார்கள்
தூங்க
விடாத
பெண்கள்.

காமம் என்பது வேறொன்றுமில்லை
ஒரு காட்டை அவிழ்த்து
தங்கள் மேல்
உதறிக்
கொள்ளுதல்.

குற்றமற்ற மிகச் சிறந்த
நல்ல
தருணங்களை
நழுவ விட்டவர்கள்தாம்
நாற்பதுக்கு மேல்
தனித்த படுக்கையில்
அழுது
கொண்டிருப்பவர்கள்.




அறிவுமதி