மழைத்தும்பிகள்



வழியனுப்பி விட்டு
வந்து
கண்ணாடி முன்
நின்றேன்
வந்து விட்டாய்

உழைத்து முடித்த
களைப்புகளோடு
பல மாதங்களுக்குப் பிறகு
வந்திருக்கிற இவனைத்
தூங்க வைத்து
அழகு பார்க்கிறது
என் காமம்

மழைக்காலத்துக்
குளிர்
போலில்லை
பனிக்காலத்துக்
குளிர்
இடையூறு செய்யாமல்
படித்துக் கொண்டிருக்கும்
பெண்ணின்
முகம் திறந்து
நூலகம்
போயிருக்கிறீர்களா?

மூட மூடத்தான்
நிர்வாணம்

அடவுகள் பதுங்கிய
உடல்களுக்குள்ளிருந்துதான்
வெளியேறுகின்றன
உடும்புகளின்
சங்கீதம்

இருட்டுக்குப் பிறகான
வெளிச்சத்திற்காகத்தான்
காத்திருக்கின்றன
கண்கள்

அறிவுமதி