நியூஸ் வே



‘‘உங்க சக்சஸ் சீக்ரெட் என்ன?’’ என அனுஷ்காவிடம் கேட்டால், ‘‘ஆக்டிங் மீது நான் கொண்டிருக்கும் ஈடுபாடு, கேமரா முன் முடிந்தவரை நடிப்பை வெளிப்படுத்துவது. டைரக் டரும் சக நடிகர்களும் டெக்னீஷியன்களும் அதை மெருகேற்றுகிறார்கள். தட் இஸ் த சீக்ரெட்’’ - என பில்டப் இல்லாமல் சொல்கிறார் அனுஷ்!

காமெடி நடிகை வித்யுலேகாவிற்கு ‘இது ரியல் ஹேப்பி பர்த் டே’ என சொல்ல வைத்திருக்கிற இன்ஸிடென்ட் இது. பிறந்தநாளுக்கு ரஜினியிடம் ஆசி வாங்கும் ஆசையை தனது அப்பா மோகன்ராமிடம் தெரிவித்திருக்கிறார். மோகன்ராம் உடனே ரஜினியிடம் தெரிவிக்க, வித்யுவை அழைத்து ஆசீர்வதித்த ரஜினி, அழகிய ராகவேந்திரா படத்தை பரிசளித்திருக்கிறார்.

விஜய்சேதுபதிக்கு ஆசை நிறைவேறிவிட்டது. நயன்தாராவோடு ‘நானும் ரௌடிதான்’ படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அதற்காக இத்தனை நாள் பாதுகாத்த மீசை, தாடியையெல்லாம் துறந்து விட்டார். இந்தத் தோற்றம் படத்திற்கான அவசியமாம்.

பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை செய்கிறார் தேவயானி என மீடியாவில் வந்த செய்தியால் தேவயானி வீட்டுக்காரர் ஹேப்பி ஆனாலும் அந்த பள்ளி நிர்வாகம் கடுப்பாகிவிட்டதாம். ‘‘லீவ் போஸ்ட்ல இனிமே நீங்க வேலையைத் தொடர வேண்டாம்...’’ என்ற கண்டிஷனோடு அம்மணியை ஆன் த ஸ்பாட்டில் அனுப்பி விட்டதாம்.

‘உத்தம வில்லனு’க்காக மிகுந்த அக்கறையோடு வேலை செய்து கொண்டிருக்கிறார் கமல். சிறப்பு ஒலிக்காக அமெரிக்கா வரைக்கும் போயிருக்கிறார். அனேகமாக நடப்புப்படி அடுத்த வருஷம் ஜனவரி 26ல்தான் படம் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. குடியரசு தின வெளியீடு!

சிம்புதேவனின் அடுத்த படத்திற்காக விஜய்யை பாட வைக்க தேவிஸ்ரீபிரசாத் விரும்பினார். விஜய்யை அணுகி கேட்கவும் செய்தார். விஜய் ‘நோ’ சொல்லிவிட்டார். ‘‘என் படங்களில் மியூசிக் டைரக்டர்கள் நன்றாகவே ட்யூன், பாடல்கள் போடுகிறார்கள். ஆனால், என் பாடலுக்கு அதிகம் பப்ளிசிட்டி கிடைத்துவிடுகிறது. அந்த அளவுக்கு மற்ற நல்ல பாடல்கள் கவனம் பெறுவதில்லை. அதனால் சின்னதா ஒரு ப்ரேக்...’’ என்று காரணம் சொன்னாராம் விஜய்.

‘காக்க காக்க’ படத்தின் ஸ்பெஷல் வெர்ஷன்தான், அதுவும் அஜித்தின் ஸ்டைலில்தான் ‘என்னை அறிந்தால்’ படம் அமைந்திருக்கிறதாம்.

சூர்யாவின் ‘மாஸ்’ பட ஷூட்டிங் பல்கேரியாவில் நடந்துவருகிறது. சூர்யா, வெங்கட்பிரபு, ப்ரணிதா என நயன்தாரா தவிர ஒரு டீமே அங்கே சென்றுள்ளது. ஒரு பாடலை அங்கே ஷூட் செய்திருக்கிறார்கள். பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

‘‘‘தலைவா’ ஷூட்டிங் மும்பையில நடந்தபோது, என் பர்த் டேவும் வந்துச்சு. கேக் வரவழைச்சு விஜய் உள்பட மொத்த யூனிட்டும் என்னை வாழ்த்தினாங்க. இப்போ சிம்புதேவன் ஷூட்டிங்ல விஜய் செம பிஸியாக இருந்தும் கூட என் பிறந்தநாளை ஞாபகம் வச்சு, என்னை வாழ்த்தினது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

போன் கால், வாட்ஸ் அப், எஸ்.எம்.எஸ்னு அவ்வளவு வாழ்த்துக்கள். எல்லாரோட அன்பையும் சம்பாதிச்சு வச்சிருக்கேன் போல’’ எனப் பூரிக்கும் மனோபாலா, அடுத்த படத்தின் தயாரிப்பு வேலையையும் தொடங்கிவிட்டார்.

கன்னடத்தில் புனித் ராஜ்குமாரின் ‘தீரா ராணா விக்ரமா’ படத்தில் நடித்து வரும் அஞ்சலி, தமிழில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, அடுத்து விமல் படத்துக்கு ரெடியாகி விட்டார். தெலுங்கில் அஞ்சலி நடித்த ‘கீதாஞ்சலி’ பட இயக்குநரின் அடுத்த படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார் அஞ்சலி.

‘மோனோ மோனோ கேஸலினோ...’ பாடல் சமந்தா வின் ஐபோ னில் ‘மோஸ்ட் ப்ளேய்டு ஸாங்’ லிஸ்ட்டில் இருக்கிறதாம்.

மீண்டும் பரபரவென களம் இறங்குகிறார் லிங்குசாமி. விஷாலுக்காக ‘சண்டக்கோழி 2’ ஸ்கிரிப்ட்டை முடித்துவிட்டு, ஜனவரி இறுதி யில் ஷூட்டிங் கிளம்ப ரெடியாகி இருக்கிறார் லிங்கு!

அதே நேரம் அதே இடமாக ஈ.சி.ஆர். ரோட்டில் உள்ள செட்டிலேயே விஜய்யின் அடுத்த கட்ட ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்துவருகிறது. வாள் சண்டைக்காட்சி ஒன்று படத்தில் இடம்பெறுகிறது. இதற்காக ஸ்பெஷலாக ஸ்பாட்டில் வாள் சுற்றிப் பழகியிருக்கிறார் ஹன்சிகா. ‘வாள்’க ஹன்சி!

‘‘ஹீரோயினாக நடிக்கிறது ஈஸியா, பேயாக நடிக்கிறது ஈஸியா?’’ என ‘1 பந்து 4 ரன் 1 விக்கெட்’ பட ஹீரோயின் ஹாசிகாவிடம் கேட்டால், திகிலாக முறைக்கிறார். ‘‘கிளாமராக நடிக்கிறது ஈஸி. பேயாக நடிக்கிறது சவாலாக இருந்துச்சு. பேய்னாலே எனக்கு பயம்தான். தியேட்டர்ல என்னைப் பார்த்து நானே பயந்துட்டேன்’’ என அலறுது பொண்ணு!

ஷங்கர் இரண்டு விதமான கதைகளை ரெடி பண்ணி வைத்திருக்கிறார். ஒன்று பக்கா ஆக்ஷன். மற்றது செம லவ். ஆக்ஷனுக்கு அஜித் (அ) விஜய் என்பது ஷங்கர் விருப்பம். காதலுக்கு இன்னும் ஹீரோ அவருக்கே முடிவாகவில்லை.

வளசரவாக்கம் பகுதிக்கு ஆபீஸ் மாற்றியிருக்கிறார் சூரி. ‘‘ஆர்யா நடித்த ‘கலாபக் காதலன்’ பட ஆபீஸாக இந்த ஆபீஸ் இருந்தபோது சான்ஸ் கேட்டு இங்கே வந்திருக்கேன். இப்போ அதுவே என்னோட ஆபீஸா ஆகியிருக்கு...’’ என நெகிழும் சூரி, இதுவரை 50 படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.