JOKES



‘‘கனவுல நடிகைகள் வந்து தூக்கத்தைக் கெடுக்கிறாங்கன்னு ஆஸ்பத்திரியில தங்கி ட்ரீட்மென்ட் எடுக்கறீங்களே, இப்ப எப்படி இருக்கு?’’
‘‘நடிகைகளுக்குப் பதிலா நர்சுங்க கனவுல வர்றாங்க..!’’
- சீர்காழி வி.ேரவதி, சென்னை-59.

‘‘எதிரி ஏன் என்னைப் பார்த்து ‘வள்... வள்...’ என்கிறான்?’’
‘‘தங்களைக் ‘குரைத்து’ மதிப்பிடுகிறான், மன்னா..!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

‘‘என் வழி தனி வழி...’’
‘‘தலைவா, அது நோ என்ட்ரி ரோடு..!’’
- அ.ரியாஸ், சேலம்.



‘‘உங்க பொண்ணுக்குப் பார்த்த மாப்பிள்ளை அரசியல்வாதின்னு சொல்றீங்களே... என்ன படிச்சிருக்கார்?’’
‘‘நேத்து வரைக்கும் அவருக்கு வந்த எல்லா குற்றப் பத்திரிகைகளையும் படிச்சிருக்கார்!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘தலைவர் சமீபகாலமா பொதுக்கூட்டம் எதுவும் போடறதில்லையே... ஏன்?’’
‘‘தொண்டர்கள் வாடகைக்குக் கிடைக்கலையாம்..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் சினிமா நட்சத்திரமா இருந்தாலும், அவங்க குழந்தைக்கு ‘நிலாச்சோறுதான்’ ஊட்ட முடியுமே தவிர, ‘நட்சத்திர சோறா’ ஊட்ட முடியும்?
- நிலாச்சோறு சாப்பிட்டபடி சிந்திப்பவர்கள் சங்கம்
- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிாி.

ரேஸ் குதிரைக்குத் தீனி போடலாம். பொய்க்கால் குதிரைக்கும் கற்பனைக் குதிரைக்கும் தீனி போட முடியுமா?
- கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு கன்னாபின்னாவென எழுதுவோர் சங்கம்
- பா.ஜெயக்குமார், வந்தவாசி.