மாதா கோவிலில் தன்ஷிகா!



‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ விசாகா சிங்கும், பிரியா ஆனந்தும் உடன் பிறவா சகோதரிகளாகி விட்டார்கள். அவருக்கு இவரும், இவருக்கு அவரும் சிபாரிசு செய்து, பட வாய்ப்பு பெறுகிறார்கள். விசாகா சென்னைக்கு வந்தால், பிரியாவின் வீட்டில்தான் தங்குகிறார். இதுபற்றி கேட்டபோது, திருவாய் மலர்ந்தருளினார் பிரியா. ‘சினிமாவில் யாருடனும் நான் இவ்வளவு நட்பாக இருந்ததில்லை. விசாகாவின் நல்ல குணம் என்னைக் கவர்ந்தது.

நானும், அவரும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் நடித்துள்ளோம். அவருக்கு சிபாரிசு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆல்ரெடி திறமையான நடிகை என்று அவர் தன்னை நிரூபித்திருக்கிறார். அவரும் எனக்கு சிபாரிசு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தேவையற்ற விஷயங்களைப் பேசி, எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் தூய்மையான நட்பைக் கெடுத்து விடாதீர்கள்’ என்று கையெடுத்துக் கும்பிடுகிறார்.

தமிழில் ‘விழித்திரு’, ‘காத்தாடி’, ‘திறந்திடு சீசே’, ‘கிட்ணா’, ‘மால்’ ஆகிய படங்களில் நடிக்கும் தன்ஷிகா, அன்னை வேளாங்கண்ணி மாதாவின் தீவிர பக்தை. நேரம் கிடைக்கும்போது சர்ச்சுக்கு செல்கிறார். மனமுருக வேண்டுகிறார். கையில் அணிந்துள்ள தங்க மோதிரத்தைக் கழற்றி காணிக்கையாகச் செலுத்துகிறார். மாதாவின் கோவிலை முட்டி போட்டுக் கொண்டு வலம் வருகிறார். இப்படி ஒரு நிலைப்பாடு கொண்டு மனதை பக்தியில் செலுத்துவதால், தன் மனதில் என்ன நினைக்கிறாரோ அது உடனே நடக்கிறதாம்.

 தேவராஜ்