காவல்நிலையத்தில் காதல்!



ஊரைவிட்டு ஓடிவந்த இளம் காதல்ஜோடி மகேந்திரன், மனிஷாஜித் இருவரும் சென்னையில் போலீசிடம் சிக்குகிறார்கள். சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களைக் கைதுசெய்த போலீஸ், 24 மணி நேரம் காவலில் வைக்கிறது. அந்த நேரத்தில் காதல் ஜோடி சந்திக்கும் சுவாரஸ்யம் மற்றும் திகில் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகும் படம் ‘விந்தை’.

இந்தப்படத்தில் காமெடிக்கும் முக்கியத்துவம் உள்ளது. படப்பிடிப்புக்காக சென்னையில் காவல்நிலைய அரங்கம் அமைத்து காட்சிகளை எடுத்துவருகிறார்கள். ‘காதல் 2014’ படத்தையடுத்து அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் தயாரிக்கும் படம் இது. ‘வர்மம்’ பட இயக்குனர் லாரா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம்.