இலக்கை நோக்கும் மழைத்துளி!



“ஒரு குடும்பம் வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்று சொல்வார்கள். அதே நேரத்தில் ஒரு பொய் ஒரு கல்யாணத்தையே நிறுத்திவிடும் என்பதும் நிஜம்.

எல்லா மழைத்துளியுமே பூமியைத் தொட்டவுடன் அதன் இலக்கை நோக்கிப் போகும். அதுபோல் இந்த நனையாத மழைத்துளி எந்த இலக்கை நோக்கிப் போகிறது? என்பதுதான் ‘நனையாத மழையே’ படத்தின் மையக் கரு” என்கிறார் தயாரிப்பாளரும் இயக்குனருமான மகேந்திர கணபதி.

மலையாளத்தில் ஏராளமான படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அருண்பத்மநாபன் நாயகனாக நடிக்க, ‘49-0’ படத்தில் நடித்த வைதேகி நாயகியாக நடிக்கிறார். கானா பாலா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.சௌந்தர்யனின் இசையில் அறிவுமதி, நா.முத்துக்குமார், சீர்காழி சிற்பி பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.‘அரண்மனைக்கிளி’ உட்பட ஏராளமான வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளர் கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

-எஸ்