செல்ஃபீயால் வந்த வினை!



செல்ஃபீ மோகத்தால் ஒரு இளம்ஜோடிக்கு ஏற்படும் பிரச்னை, அதனால் அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றை மையப்படுத்தி உருவாகிறது ‘சண்டிக்குதிரை’ படம்.

பல்வேறு பத்திரிகைகளில் 350க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதி, விளம்பரப்படங்களில் பணியாற்றி, தொலைக்காட்சிகளில் பொறுப்பு வகித்து திறமை காட்டிய அன்புமதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த ராஜ்கமல் முதல்முறையாக பெரியதிரைக்கு வருகிறார். அவருக்கு ஜோடியாக மானஸா நடிக்கிறார்.திருவண்ணாமலைக்குப் புகழ் சேர்த்த ‘நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…’ உள்ளிட்ட ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப்பாடல்களை எழுதிய வாரா இந்தப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

-என்