தொங்கு சட்டசபை!
சரோஜாதேவி பதில்கள்
* வண்டைத் தேடி பூ போவது எப்போது? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. வண்டுக்குத்தான் பூ தேவை. மலர்ந்ததுமே வந்து அமரவேண்டியது வண்டின் கடமை.
* சத்தமில்லா யுத்தம் எது? - கே.நடராஜன், திருவண்ணாமலை. சத்தமில்லா எதுவுமே யுத்தம் ஆகாது.
* தொங்கு சட்டசபை என்றால் என்ன சரோ? - கே.கே.பி.மணியன், குனியமுத்தூர். சரோஜாவுக்கு அரசியலில் ஆர்வமில்லை; ஈடுபட வற்புறுத்தாதீர்கள்.
* நுங்கு ஜூஸ் சாப்பிட்டிருக்கீங்களா? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. ஆண்களிடம் கேட்கவேண்டிய கேள்வி.
* காதலர்கள் ஒருவருக்கொருவர் கேட்கக்கூடாத கேள்வி எது? - த.சத்தியநாராயணன், அயன்புரம். காதலித்தபின் கேட்கக்கூடாத கேள்வி, ‘பிடிச்சிருக்கா?’
|