தேங்காய்!
சரோஜாதேவி பதில்கள்
* கன்னிப் பொண்ணும், காரும் ஒண்ணுன்னு கமல் பாட்டு பாடியிருக்கிறாரே? - த.சத்தியநாராயணன், அயன்புரம். கன்னிப் பொண்ணும், தினசரி காலண்டரும் கூட ஒண்ணுதான். ஏன்னு சொல்லுங்க பார்க்கலாம்.
* கழுவுன மீன் நழுவுமா? - கே.நடராஜன், திருவண்ணாமலை. பர்ஸ்ட்நைட்டிலேயே மணமகள் எஸ்கேப் என்றெல்லாம் செய்தித்தாள்களில் வாசிக்கிறோமே சார்?
* சரோவுக்கு கவிதை பிடிக்குமா? - என்.தமிழ்மணி, திருவண்ணாமலை. சிங்கார ஆமணக்கு; உன்சிலுக்கு தேகம் தினம் எனக்கு... ...என்று நண்பர் சங்கீத சரவணன் ஒரு கவிதை எழுதி அனுப்பி இருக்கிறார். மிகவும் பிடித்திருந்தது.
* சில நேரங்களில் காய் கூட இனிக்கிறதே? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. நீங்க கடிச்சது தேங்காய் சார்.
* இப்போது பெண்கள் யாரும் பின்னல் போடுவதில்லையே? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்) பின்னால் பார்க்க அது உங்களுக்கு ஒரு சாக்கு.
|