தேங்காய்!



சரோஜாதேவி பதில்கள்

* கன்னிப் பொண்ணும், காரும் ஒண்ணுன்னு கமல் பாட்டு பாடியிருக்கிறாரே?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
கன்னிப் பொண்ணும், தினசரி காலண்டரும் கூட ஒண்ணுதான். ஏன்னு சொல்லுங்க பார்க்கலாம்.

* கழுவுன மீன் நழுவுமா?
- கே.நடராஜன், திருவண்ணாமலை.
பர்ஸ்ட்நைட்டிலேயே மணமகள் எஸ்கேப் என்றெல்லாம் செய்தித்தாள்களில் வாசிக்கிறோமே சார்?

* சரோவுக்கு கவிதை பிடிக்குமா?
- என்.தமிழ்மணி, திருவண்ணாமலை.
சிங்கார ஆமணக்கு; உன்சிலுக்கு தேகம் தினம் எனக்கு...
...என்று நண்பர் சங்கீத சரவணன் ஒரு கவிதை எழுதி அனுப்பி இருக்கிறார். மிகவும் பிடித்திருந்தது.

* சில நேரங்களில் காய் கூட இனிக்கிறதே?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
நீங்க கடிச்சது தேங்காய் சார்.

* இப்போது பெண்கள் யாரும் பின்னல் போடுவதில்லையே?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
பின்னால் பார்க்க அது உங்களுக்கு ஒரு சாக்கு.