நியூஸ் way



* சமந்தா காதலிக்கும் நடிகர் யாரென்று தெலுங்கு டி.வி ஷோக்களில் கூட விவாதிக்கிறார்கள். அவர் நிச்சயமாக சித்தார்த் இல்லையென்பது புரிந்துவிட்டது. நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யா என்கிறார்கள்.

* அசாமில் ஆட்சியைப் பிடித்த பாரதிய ஜனதாவின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் மாடலும், நடிகையும், நாடகக் கலைஞருமான அங்குர்லதா. அவரது பழைய மாடலிங் புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வக்கிரமாக சித்தரித்தும், கமென்ட் அடித்தும் வைரலாக்கப்பட்டு வருகிறது.



இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர் அசாம் திரைக் கலைஞர்கள். பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவும் ‘இப்படி அழகான பெண்கள் வந்தால்தான் அரசியல்மீது ஆசை வரும்’ என ட்விட்டரில் கமென்ட் அடிக்க, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.

* இந்திய ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களின் சீருடைகளை மாற்ற இருக்கிறது மத்திய அரசு. இதற்காக பிரபல ஃபேஷன் டிசைனர் ரீது பேரியுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது ரயில்வே அமைச்சகம். ரீது பேரி இதற்கு கட்டணம் ஏதும் வாங்கப்
போவதில்லை.

அரசியலில் தவறான முடிவுகள் எடுத்ததால் தோற்று ஒதுங்கியிருக்கும் விஜயசாந்தி மீண்டும் வெளிச்சத்துக்கு வருகிறார். இம்முறை களம் அரசியல் அல்ல, சினிமா. கண்டிப்பான ராணுவ அதிகாரியாக அவர் நடிக்க இருக்கும் இந்தப் படம், ராணுவத்திலும் அரசியலிலும் பெண்களுக்கு இழைக்கப்பட்டும் அநீதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுமாம். தமிழிலும் தெலுங்கிலும் தயாராகும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.



* ‘‘நாட்டில், மூன்றில் ஒரு பங்கு ஏ.டி.எம்கள் சரியாக வேலை செய்யவில்லை’’ என கவலை ெதரிவித்துள்ளார் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எஸ்.எஸ்.முன்ரா. சமீபத்தில், இதற்காக நாடு முழுவதும் நாலாயிரம் ஏ.டி.எம்களில் சர்வே நடத்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி! ஏ.டி.எம்கள் வேலை செய்யவில்லை என்பதோடு, பல்வேறு விதிமீறல்கள் இருந்ததையும் இதில் கண்டறிந்துள்ளார்கள். ‘‘விரைவில் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்’’ என்கிறார் முன்ரா.

* கமலின் ‘சபாஷ் நாயுடு’ ஷூட்டிங் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரபரக்கிறது. ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் முழுவேகத்தில் நடிக்கிறார்கள். பாடல்களை ஏற்கனவே கொடுத்துவிட்டார் இளையராஜா. கமலின் மகள் அக்‌ஷரா இதில் உதவி இயக்குநர்!

* வியட்நாமின் தெருவோர உணவகத்தில் பன்றி இறைச்சியும், நூடுல் சூப்பும் சாப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்திவிட்டார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா! கடந்த வாரம் வியட்நாம் நாட்டிற்கு விசிட் அடித்தவர், தலைநகரம் ஹனோயில் ஃபேமஸ் வியட்நாமிய உணவான ‘பன் சா’வை, அமெரிக்காவின் புகழ்பெற்ற சமையற் கலைஞரும் உணவு விமர்சகருமான ஆண்டனி பவுர்டைனுடன் சேர்ந்து உண்டார். மிக சிம்பிளாக ஒரு பிளாஸ்டிக் ஸ்டூலில் உட்கார்ந்து சாப்பிட்ட ஒபாமாவுடன் ஒரு போட்டோகூட எடுத்துக்கொள்ள முடியவில்லையே என வருந்துகிறார் இந்த உணவக உரிமையாளர், தி லியென்.

* ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சி அமையும்போதெல்லாம் அரசு திட்டங்களுக்கு என்.டி.ஆர் பெயரைச் சூட்டுவது வழக்கம். இப்போது அந்த நடைமுறை மாறி, எல்லாவற்றுக்கும் முதல்வர் சந்திரபாபு நாயுடு பெயரே வைக்கிறார்கள். ‘மாமனாரை மருமகன் மறந்துவிட்டாரே’ என யாரும் முணுமுணுப்பதுகூட இல்லை!

* நயன்தாராவுடன் நடிக்கும் ‘காஸ்மோரா’ படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் கார்த்தி. ‘காஸ்மோரா’வை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள்.

* ஆன்லைன் சூதாட்டத்தை சட்டபூர்வமாக அனுமதிக்கும் முதல் இந்திய மாநிலம் என்ற ‘பெருமை’யைப் பெற்றிருக்கிறது நாகாலாந்து.

* அசின் கேரளாவிற்குச் செல்லும் வழியில் சென்னைக்கும் வந்து போகிறார். ஆனால் சினிமா நண்பர்களுடன் சந்திப்பு வைத்துக்கொள்வதில்லை. ஏனோ..?



* பத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய்சேதுபதி, இனி இதில் பாதியாவது முடித்துவிட்டுத்தான் அடுத்த படம் நடிக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டார். அதனால் கதை கேட்பதை ஒரு வருடத்திற்கு தற்காலிகமாக நிறுத்துகிறார்.

* ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசிய பிறகான 70 ஆண்டுகளில் அந்த நகருக்குச் செல்லும் முதல் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. கடந்த வாரம் அங்கு சென்ற அவர், அணுகுண்டு வீசியதற்காக வருத்தம் தெரிவிக்கவில்லை.

* ‘இருமுகன்’ முடித்துவிட்டு, குடும்பத்தினருடன் வெளிநாடு சென்றிருக்கிறார் விக்ரம். சென்னை திரும்பியதும் காஜல் அகர்வாலுடன்
நடிக்கும் ‘கருடா’ படம் துவங்குகிறது.

* இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டியை தன் நெருங்கிய நண்பர்களுடன் லண்டன் சென்று கண்டு ரசிக்கத் திட்டமிட்டிருக்கிறார் ஹன்சிகா.

* ‘பாஜிராவ் மஸ்தானி’க்குப் பிறகு மீண்டும் வரலாற்றுப் படமே எடுக்கப் போகிறார் சஞ்சய் லீலா பன்சாலி. ‘பத்மாவதி’ என்ற இந்தப் படம் மேவார் ராணி பத்மினியின் கதையைத் தழுவியது. அநேகமாக தீபிகா படுகோனே நடிக்கலாம்!

* பாலிவுட் ‘சுல்தான்’ படத்தில் மல்யுத்த வீரராக நடிக்கிறார் சல்மான்கான். அதற்காக உடல் எடையை அதிகரித்து முறுக்கேற்றியிருக்கிறார். இதில், ‘இறுதிச்சுற்று’ ரித்திகாசிங் கேரக்டர் போல அனுஷ்கா சர்மா கேரக்டரை வடிவமைத்திருக்கிறார்கள். ரம்ஜான் விருந்தாக படம் ரிலீஸ்.