
'மங்காத்தா' மூலம் அறிமுகமாகியிருக்கும் பாரதியார் வாரிசு நிரஞ்சன் பாரதி பற்றி, 'மரபணுவில் பதிந்திருந்தது காலத்தால் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது' என்றுதான் சொல்ல வேண்டும்!
- எம்.பர்வீன் பாத்திமா, சென்னை.

'அமெரிக்க டிவி நடிகை ஈவா மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்காக சைகை மொழி படிக்கிறார்' என்ற சேதி நெகிழ்ச்சி. நம்மூர் நடிகைகள் ரசிகர்களுக்கென ஏதாச்சும் மெனக்கெடுகிறார்களா என்ன?
- கோ.சாந்தகுமாரி, சேலம்.

பத்து & பத்து & பத்துக்கு என்ன செய்தோம் என பத்து பிரபலங்கள் கெத்தாக சொன்னவை அனைத்தும் முத்து!
- கோ.சாந்தகுமாரி, சேலம்.

துறைசார் நிபுணர்களிடமிருந்து பெறப்பட்ட விளக்கங்களை அளிக்கும் 'கேள்வி&பதில்' பகுதி பலருக்கும் பயன் அளிக்கிறது.
- ஜோதிமணி, மதுரை.

கலைக்கு எல்லை இல்லை என்பதால், இந்தித் திரையுலகம் தமிழகத்து நாட்டுப்புறப் பாடகி சின்னப் பொண்ணுவை வரவேற்பதிலும் ஆச்சரியமில்லை. அரபிக்கடல் காற்றில் தமிழைக் கலக்கட்டும் சின்னப்பொண்ணு!
- துரைராஜ், காருகுறிச்சி.

கவிதைக்காரர்கள் வீதி'யின் அனைத்துக் கவிதைகளும் கவிப்பிரியர்களுக்கு அறுசுவை விருந்து!
- முரளி, கள்ளக்குறிச்சி.

'எத்தனை நோயாளிகளைக் குணப்படுத்தி அனுப்பியிருக்கிறோம்' என்பது முக்கியமில்லாமல் 'எவ்வளவு நோயாளிகள் தங்களிடம் வருகிறார்கள்' என்பதே சில மருத்துவர்களின் எண்ணம்.
- பூங்கோதை, விழுப்புரம்.

'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது'ங்கிறது சரியாத்தான் இருக்கு. கடைசி பக்கக் கதை ஒருபக்கமாக இருந்தாலும் அதன் கருத்து எங்களுக்கு பல புத்தகங்கள் படித்த அனுபவத்தைத் தருகின்றது.
-இராம.கண்ணன், திருநெல்வேலி.

எங்க அபிமான இலக்கியவாதிகள் 'என்ன செய்துக்கிட்டிருக்காங்க' என்று 'இலக்கியம் இதோ... இதோ...'வில் தெரிந்துகொள்ள முடிந்தது.
-கந்தசாமி, திருச்செந்தூர்.